search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Legal Awareness Camp"

    • தொழிலாளா்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது.
    • சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்து விளக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூரில் புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் பேரிலும், முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவா் சொா்ணம் ஜெ.நடராஜன் வழிகாட்டுதல்படி புலம் பெயா்ந்த தொழிலாளா்களுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் பழைய நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

    முகாமில் குற்றவியல் நீதித்துறை நடுவா் புகழேந்தி, சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சாா்பு நீதிபதியுமான மேகலா மைதிலி, கூடுதல் மகிளிா் நீதிமன்ற நீதித்துறை நடுவா் காா்த்திகேயன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

    இதில் தொழிலாளா்களுக்கான உரிமைகள் மற்றும் சட்டங்கள் குறித்தும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில் வழங்கப்படும் சட்ட உதவிகள் குறித்தும் விளக்கப்பட்டது. மேலும் தொழிலாளா்களுக்கு வேலைக்கு தகுந்த ஊதியம், பணிப் பாதுகாப்பு, காப்பீடு வழங்கப்படுகிறதா என்பன உள்ளிட்ட விவரங்களை நீதிபதிகள் கேட்டறிந்தனா்.

    சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வக்கீல் முகமதுகான், திருப்பூா் வடக்கு காவல் நிலைய ஆய்வாளா் உதயகுமாா், 15 வேலம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா் தாமோதரன் மற்றும் தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

    கன்னியாகுமரியில் இருந்து வீடு தேடி வரும் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியது. பிரசாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதித் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.
    கன்னியாகுமரி:

    இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்ட ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தி பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய சட்ட சேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், வீடுதேடி வரும் நீதி சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    நீதி எல்லோருக்கும் பொதுவானது. வறுமை உள்பட பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் லோக் அதாலத் செயல்பட்டு வருகிறது.

    இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களை வீடு தேடி சென்று உதவி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இருந்து 5 வாகனங்கள் மூலம் வீடு தேடி வரும் நீதி என்பதை மைய பொருளாக கொண்டு சட்ட விழிப்புணர்வு வாகன பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவருமான துரைசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், சென்னை ஐகோர்ட்டு சட்ட சேவைகள் தலைவருமான ராஜா, மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன், மாவட்ட நீதிபதி ராஜசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    ×