என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கன்னியாகுமரியில் வீடு தேடி சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் - சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்1 Nov 2021 4:57 AM GMT (Updated: 1 Nov 2021 4:57 AM GMT)
கன்னியாகுமரியில் இருந்து வீடு தேடி வரும் சட்ட விழிப்புணர்வு வாகன பிரசாரம் தொடங்கியது. பிரசாரத்தை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி உதித் உமேஷ் லலித் தொடங்கி வைத்தார்.
கன்னியாகுமரி:
இந்தியாவின் 75-வது ஆண்டு சுதந்திர தினம் மற்றும் தேசிய சட்ட ஆணைக்குழுவின் 25-வது ஆண்டு விழாவை முன்னிட்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நாட்டின் அனைத்து கிராம மக்களுக்கும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தி பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று கன்னியாகுமரியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகை வளாகத்தில் புதிய சட்ட சேவை முகாம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியும் தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவருமான உதித் உமேஷ் லலித் முகாமை தொடங்கி வைத்தார். மேலும், வீடுதேடி வரும் நீதி சட்ட விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்து பல்வேறு துறை சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நீதி எல்லோருக்கும் பொதுவானது. வறுமை உள்பட பல்வேறு காரணங்களால் மக்களுக்கு உதவி செய்வதற்கு யாரும் இல்லை என்ற நிலையை போக்கும் வகையில் லோக் அதாலத் செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் அனைத்து பகுதிகளில் உள்ள மக்களை வீடு தேடி சென்று உதவி செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரியில் இருந்து 5 வாகனங்கள் மூலம் வீடு தேடி வரும் நீதி என்பதை மைய பொருளாக கொண்டு சட்ட விழிப்புணர்வு வாகன பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணைய செயல் தலைவருமான துரைசாமி, சென்னை ஐகோர்ட்டு நீதிபதியும், சென்னை ஐகோர்ட்டு சட்ட சேவைகள் தலைவருமான ராஜா, மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட முதன்மை நீதிபதி அருள்முருகன், மாவட்ட நீதிபதி ராஜசேகர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X