search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lakshmi Ammal Polytechnic College"

    • கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் “வாக்களிப்பதன் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் சுவர் இதழ் போட்டி நடைபெற்றது.
    • முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் மாணவ, மாணவி களிடம் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக "வாக்களிப்பதன் முக்கியத்துவம்" என்ற தலைப்பில் சுவர் இதழ் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிக்கு கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். போட்டியில் 55 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சார்பாக ரொக்கப்பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இதில் 3-ம் ஆண்டு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர் பிரசாந்த் முதலிடமும், இயந்திரவியல் துறை மாணவர் விஸ்வாமணி 2-ம் இடமும், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை மாணவர் சின்னத்தம்பி 3-ம் இடமும் பெற்றனர்.

    வெற்றி பெற்ற மாணவர்களை கே. ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே. ஆர். அருணாசலம், கல்லூரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். போட்டி ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை விரிவுரையாளர் பாலமுருகன், இயந்திரவியல் துறை விரிவுரையாளர் வையண பிரகாஷ் செய்திருந்தனர்.

    • கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பில் பொறியியல் மன்றக் கூட்டம் நடைபெற்றது.
    • பி.எஸ்.என்.எல். அதிகாரி சங்கரநாராயணன் 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மன்றத்தின் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்து பேசினார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பில் பொறியியல் மன்றக் கூட்டம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேஸ்வரன் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் ராஜாமணி முன்னிலை வகித்தார். 3-ம் ஆண்டு மாணவி அபிஷா செல்லம் வரவேற்று பேசினார்.

    பொறியியல்மன்ற செயல்பாடுகள்

    கூட்டத்திற்கு பயிலக முன்னாள் மாணவரும், சங்கரன்கோவில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் இளநிலை தொலைதொடர்பு அதிகாரியுமான சங்கரநாராயணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 2023-2024-ம் கல்வி ஆண்டிற்கான பொறியியல் மன்றத்தின் செயல்பாடுகளைத் தொடக்கி வைத்து பேசினார்.

    மேலும் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தினரால் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு வழங்கப்படும் குறுகியகால தொழிற்பயிற்சி மற்றும் அந்நிறுவன தொழில்நுட்ப செயல்பாடுகளை பார்வையிடல் போன்றவைகளுக்கான வழிமுறைகளை எடுத்து கூறினார்.

    முன்னதாக இ.சி.இ. துறையின் 3-ம் ஆண்டு மாணவர் கணேஷ்குமார் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். முடிவில் 2-ம் ஆண்டு மாணவர் முகுந்தன் நன்றி கூறினார். 3-ம் ஆண்டு மாணவர் ஜெபிமோசஸ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர். அருணாச்சலம் ஆலோசனைப்படி, முதல்வர் தலைமையில் துறைதலைவர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

    ×