search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kota city"

    உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்#InternationalYogaDay2018
    ஜெய்ப்பூர்:

    2015-ம் ஆண்டு முதல் ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4-வது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

    அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று அம்மாநில முதல்மந்திரி வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.



    மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 லட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையில் வழங்கப்பட்டது.

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் இன்று யோகா பயிற்சியும், யோகா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றன. #InternationalYogaDay2018
    ×