search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kim Jong Un"

    • ஆயுத தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன், உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்
    • தென்கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் முடிவு

    கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.

    வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிற்கு பிடிக்கவில்லை. இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரிய கடற்பகுதியில் காணப்பட்டது. இதற்கு வடகொரிய ஆட்சேபனை தெரிவித்தது.

    வருகிற 21 மற்றும் 24-ந்தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

    இதை வடகொரியாவுக்கான அச்சுறுத்தல் என கிம் ஜாங் உன் பார்க்கிறார்.

    இந்த நிலையில் வடகொரியாவின் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்து வருகிறார். அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? எனத் தெரியவில்லை.

    அதனோடு போருக்கு தயாராகும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஏற்ப ஆயுத தயாரிப்பை அதரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஏவுகணை என்ஜின், பீரங்கி மற்றும் ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய கேட்டுக்கொண்டார்.

    அங்குள்ள மீடியா ஒன்று, கிம் ஜாங் உன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை வரைபடத்தில் சுட்டிக்காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் கிம் ஜாங் உன் போர் தொடுப்பதற்கு, ராணுவத்தை தயார் படுத்துகிறார் என பார்க்கப்படுகிறது.

    வடகொரியா குடியரசு நிறுவப்பட்ட 75-ம் ஆண்டையொட்டி அடுத்த மாதம் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்த இருக்கிறது. ராணுவத்தை பலப்படுத்த பல்வேறு குழுக்களை வடகொரியா பயன்படுத்தி வருகிறது. போருக்கு தயாராகும் வகையில், தற்போதைய நவீன ஆயுதங்களை கொண்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • கொரியா போரில் வடகொரியாவின் 70-வது வெற்றி தின கொண்டாட்டத்தில் ரஷிய படை பங்கேற்பு
    • சீன ராணுவ வீரர்களும் வெற்றி விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்

    ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின் கொடுத்து அனுப்பிய கடிதத்தை வழங்கினார். கடிதத்தை பெற்ற கிம் ஜாங் உன், பாதுகாப்புத்துறை மந்திரி தலைமையில் ராணுவ குழுவை அனுப்பியதற்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும், இருவர் இடையிலான ஆலோசனை மூலோபாய மற்றும் பாரம்பிய வடகொரியா- ரஷியா நட்பு குறித்ததாக இருக்கும் எனக் கூறினார்.

    கொரிய போரில் வடகொரியாவின் வெற்றியை கொண்டாடும் வகையில், 70-வது வெற்றி தினம் இந்த வாரம் நடைபெற இருக்கிறது. இதில் பங்கேற்பதற்காக ரஷிய வீரர்கள், சீன வீரர்கள் வட கொரியாக சென்றுள்ளது.

    அதிபர் சந்திப்பிற்குப்பின் வடகொரியா ராணுவ மந்திரியை சந்தித்தார். அப்போது ரஷியா மந்திரி செர்கேய் ஷாய்கு ''உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவம்'' என வடகொரியாவை பாராட்டினார்.

    • விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்துவதாக தகவல்.
    • வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ.250 கோடி செலவிடுகிறார்.

    ரோம் நகரம் பற்றி எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்து கொண்டிருந்தான் என படித்திருப்போம்.

    கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ள வடகொரியாவில், மக்கள் கடுமையான உணவு பஞ்சத்தில் தவிக்கும் நேரத்தில், அந்நாட்டு தலைவர் கிம் ஜாங் உன் தன் வாழ்வில் இன்பங்களை அனுபவிப்பதில் எல்லையற்ற ஈடுபாட்டுடன் உலகிலேயே சிறந்தவற்றை பயன்படுத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    விலையுயர்ந்த மதுபானங்கள் மற்றும் சிகரெட்டுகள் ஆகியவற்றை மட்டுமே பயன்படுத்தும் அவர் இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியைத்தான் உண்கிறார்.

    பிரிட்டனின் பாதுகாப்பு நிபுணர் ஒருவர் கூறுகையில், "கிம் ஜாங் உன் ஒரு மது பிரியர். அதுலும் அவர் பிளாக் லேபிள் ஸ்காட்ச் விஸ்கி மற்றும் ஹென்னெஸ்ஸி பிராந்தி ஆகியவற்றையே விரும்பி பருகுகிறார். இதன் விலை, பாட்டில் ஒன்றுக்கு சுமார் ரூ.6 லட்சம் ($7000) ஆகும்" என கூறியிருக்கிறார்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு சீன பொது சுங்க நிர்வாகத்தால் பகிரங்கப்படுத்தப்பட்ட வர்த்தக தரவுகளின்படி, 40 வயதாகும் கிம், வடகொரியாவிற்கு உயர்தர மதுபானங்களை இறக்குமதி செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 250 கோடி ($30 மில்லியன்) செலவிடுகிறார்.

    கிம், மதுவகைகளை தவிர மிகச்சுவையான உணவு வகைகளையும் விரும்பி உண்கிறார். பார்மா ஹாம், (இத்தாலியின் பார்மா பிராந்தியத்தைச் சேர்ந்த ஒரு வகை உணவு) மற்றும் சுவிஸ் எமென்டல் சீஸ் ஆகியவற்றையே ரசித்து உண்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கிம் மற்றும் அவரது தந்தை, இருவருமே கோப் ஸ்டீக்ஸ் (Kobe steaks) எனப்படும் உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த மற்றும் மிகவும் விரும்பப்படும் மாட்டிறைச்சி மற்றும் கிறிஸ்டல் ஷாம்பெயின் (Cristal champagne) ஆகியவற்றை விரும்பி எடுத்துக் கொள்வார்கள்," என அவரது முன்னாள் சமையல்காரர் கூறியிருக்கிறார்.

    கிம் குடும்பத்திற்காக பிரத்தியேகமாக பீட்சா தயாரிக்க 1997ல் இத்தாலிய சமையல்காரர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தவிர, விலையுயர்ந்த பிரேசிலியன் காபியைத்தான் கிம் அருந்துகிறார். இதற்காக அவர் ஒரு வருடத்தில் சுமார் ரூ. 8 கோடி ($967,051) செலவழித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், மென்மையான தங்கப்படலத்தில் மூடப்பட்டிருக்கும் எவ்ஸ் ஸெயின்ட் லாரன்ட் (Yves Saint Laurent) வகை கருப்பு சிகரெட்டுகள்தான் அவர் விரும்பி புகைக்கிறார்.

    2014ம் ஆண்டு யூ.கே. மெட்ரோ (UK Metro) தெரிவித்த ஒரு செய்தியில் கிம் தொடர்ந்து "பாம்பு ஒயின்" உட்கொள்வதாக கூறியது. இது ஆண்மையை அதிகரிக்கும் என்றும் குழந்தைபேறுக்கான வாய்ப்புகளை மேம்படுத்துவதாகவும் பரவலாக நம்பப்படுகிறது.

    வடகொரியாவின் சர்வாதிகாரியான கிம், "அதிக மது அருந்துதல் மற்றும் புகைபிடித்தல்" ஆகியவற்றில் ஈடுபடுவதாகவும், அவரது எடை 136 கிலோ தாண்டியுள்ளது என்றும் தென்கொரிய உளவுத்துறை அறிக்கைகள் வந்த பின்னர் கிம் ஜாங் உன்னின் ஆடம்பரமான உணவுமுறை பற்றிய செய்திகள் வந்துள்ளன.

    மார்ல்போரோ சிகரெட்டுகள் (Marlboro cigarettes) மற்றும் தூக்கமின்மைக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் சோல்பிடெம் (zolpidem) போன்ற மருந்துகள் உட்பட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கிம் பதுக்கி வைத்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.
    • வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ பகுதியில் விழலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது.

    டோக்கியோ:

    வடகொரிய நாட்டின் அதிபராக இருக்கும் கிம் ஜாங் உன் அவ்வப்போது ஏவுகணை சோதனை, அணு ஆயத சோதனை போன்றவற்றை நடத்தி தனது நாட்டின் ஆயுத பலத்தை காட்டி வருகிறார்.

    குறிப்பாக அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் வகையில் அவரது நடவடிக்கைகள் இருப்பதால் வடகொரியாவிற்கு எதிராக பல்வேறு பொருளாதார தடைகளும் விதித்துள்ளது. இதனால் அந்த நாடு பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டாலும் கூட அதிபர் கிம் ஜாங் உன் தனது நடவடிக்கைகளை மாற்றிக்கொள்ளவில்லை.

    தென்கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் எதிர்ப்பில் உள்ள வடகொரியா அந்த நாடுகளை சீண்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்கா-தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சி நடத்தின. இதனால் ஆவேசம் அடைந்த வடகொரியா தனது ஆயுத சோதனையை தீவிரப்படுத்தியது.

    குறிப்பாக அமெரிக்கா-தென்கொரியாவின் ராணுவ பயிற்சி எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த மாத இறுதியில் கடலுக்கு அடியில் ரேடியோ ஆப்டிவ் என்ற செயற்கை சுனாமியை ஏற்படுத்தும் பரிசோதனையை நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் வடகொரியா இன்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ஐ.சி.பி.எம்.) சோதனை செய்துள்ளது. இந்த சோதனை போட்டியாளர்களுக்கு தீவிரமான அமைதியின்மை மற்றும் திகிலை ஏற்படுத்தும் என்று அந்த நாடு எச்சரித்துள்ளது. வடகொரியாவின் இந்த சோதனையை அதிபர் கிங் ஜாங் உன் மேற்பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையின் மூலம் ராணுவ திறன், மூலோ பாய தாக்குதல் திறன் கொண்டது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

    ஜப்பான் கடல் பகுதியை நோக்கி நடத்தப்பட்ட இந்த சோதனை ஜப்பானின் ஹக்கிடோ தீவில் பதட்டத்தை ஏற்படுத்தியது.

    வடகொரியாவின் ஏவுகணை ஜப்பானின் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ பகுதியில் விழலாம் என்று ஜப்பான் எச்சரிக்கை விடுத்தது. இதனால் அந்த தீவில் வசிக்கும் லட்சகணக்கான மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடப்பட்டது. எனினும் சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கையை ஜப்பான் திரும்ப பெற்றது.

    • கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது.
    • புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சியோல்:

    அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா தற்போது கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது.

    இந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரியா தீபகற்ப பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது.

    இதன் தொடர்ச்சியாக இன்று நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது.

    கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார்.

    தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வடகொரியா நடத்தி இருக்கும் இந்த புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
    • அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர சுமார் 14 லட்சம் பேர் முன்வந்துள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    பியாங்யாங்:

    வடகொரியாவின் கடும் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா மற்றும் தென்கொரியா படைகள் கூட்டுப்போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் அமெரிக்கா மற்றும் தென்கொரியா கூட்டுப்போர் பயிற்சியை தொடர்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடத்த தயாராக இருக்கும்படி வடகொரியா ராணுவத்துக்கு அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் அழைப்பு விடுத்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "அமெரிக்காவும் தென்கொரியாவும் அமெரிக்க அணு ஆயுதங்களை உள்ளடக்கிய கூட்டுப்போர் பயிற்சிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதனை எதிர்கொள்ளவும், போரைத் தடுக்கவும் எந்த நேரத்திலும் அணு ஆயுத தாக்குதல்களை நடத்தத் தயாராக ராணுவம் இருக்க வேண்டும்" என கூறினார்.

    இதனிடையே அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு எதிராக போராட ராணுவத்தில் சேர சுமார் 14 லட்சம் பேர் முன்வந்துள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

    • கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.
    • பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது

    உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

    இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர்.

    வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார். கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    • வடகொரிய ராணுவத்தின் 75-வது ஆண்டு விழா நடைபெற்றது.
    • இதில் அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளுடன் கலந்து கொண்டார்.

    பியாங்யாங்:

    வடகொரிய ராணுவம் நிறுவப்பட்டதன் 75-வது ஆண்டை குறிக்கும் வகையில், அந்நாட்டின் தலைநகர் பியாங்யாங்கில் பிரம்மாண்ட அணிவகுப்பு விழா நடைபெற்றது.

    இந்த விழாவில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிபர் கிம் ஜாங் உன் எந்தப் பொது நிகழ்விலும் தோன்றாமல் இருந்த நிலையில், ராணுவ அணிவகுப்பில் தனது மகளுடன் கலந்து கொண்டு நாட்டு மக்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

    இந்த ராணுவ அணிவகுப்பில் வடகொரியாவின் அணு ஆயுத அலகுகளும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,

    பியாங்யாங்:

    சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.

    இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

    • 'ஹவாசோங்-17' ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம்.
    • ராணுவ வீரர்களுடனான சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்தார்.

    பியாங்யாங் :

    ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த தயாராகி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்த நிலையில் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேற்று 'ஹவாசோங்-17' என்கிற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ஆய்வு செய்து, பின்னர் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

    இந்த சந்திப்பின்போது கிம் ஜாங் அன்னின் மகள் உடன் இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கிம் தனது மகளை முதல் முறையாக வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தினார். அப்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை கிம் தனது மகளுடன் சேர்ந்து பார்வையிட்டார். தற்போது மீண்டும் ராணுவ வீரர்களுடனான முக்கிய சந்திப்புக்கு கிம் தனது மகளை அழைத்து வந்தது கவனம் பெற்றுள்ளது.

    இதனிடையே ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றிய கிம், "உலகின் மிகவும் வலிமை மிக்க அணு சக்தியைக் கொண்டிருப்பதே வடகொரியாவின் இறுதி இலக்கு. அது இந்த நூற்றாண்டின் முன்னோடியில்லாத முழுமையான அணுசக்தியாக இருக்கும். 'ஹவாசோங்-17' ஏவுகணை உலகின் வலிமையான ஆயுதம். இது வட கொரியாவின் உறுதியையும், உலகின் வலிமையான ராணுவத்தை உருவாக்குவதற்கான திறனையும் நிரூபித்தது" என கூறினார்.

    • கிம்முக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க தலைவராக அவரது சகோதரி கிம் யோ-ஜோங் அறியப்படுகிறார்.
    • கிம் மகளின் பெயர் கிம் ஜூ அய் என்றும், அவர் கிம்மின் மூத்த மகள் என்றும் நம்பப்படுகிறது.

    பியாங்யாங்:

    கிழக்கு ஆசிய நாடான வடகொரியா பெரும்பாலும் ஒரு மர்ம தேசமாக இருந்து வருகிறது. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது அவ்வளவு எளிதாக வெளியுலகத்துக்கு தெரிந்துவிடாது.

    இந்த மர்ம தேசத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் வழிநடத்தி வருபவர் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன். நாட்டில் என்ன நடக்கிறது என்பது எப்படி வெளியுலகத்துக்கு தெரியாதோ, அதே போலவே கிம் ஜாங் அன்னின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவலும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது.

    கிம்முக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க தலைவராக அவரது சகோதரி கிம் யோ-ஜோங் அறியப்படுகிறார். இவரை தவிர்த்து கிம்மின் மனைவி குறித்தோ அவரது பிள்ளைகள் குறித்தோ பெரிதாக எந்த தகவல்களும் கசிந்தது இல்லை.

    திருமணமாகி பல ஆண்டுகளுக்கு பிறகே கிம்மின் மனைவி ரி சோல் ஜூ வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். கிம்முக்கு 3 குழந்தைகள் இருப்பதாகவும். அதில் இருவர் பெண் குழந்தைகள், ஒருவர் ஆண் குழந்தை என்றும் கூறப்படுகிறது. இதுவரை அவர்கள் பொதுவெளியில் தோன்றியதில்லை.

    இந்த நிலையில் கிம் முதல் முறையாக தனது மகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். கிம் மகளின் பெயர் கிம் ஜூ அய் என்றும், அவர் கிம்மின் மூத்த மகள் என்றும் நம்பப்படுகிறது.

    வடகொரியா நேற்று முன்தினம் அமெரிக்கா வரை சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது. இந்த சோதனையை கிம் தனது மகள் கிம் ஜூ அய்யுடன் சேர்ந்து நேரில் ஆய்வு செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வடகொரியா அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

    சமீபகாலமாக கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் அவர் தனது மூத்த மகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தியிருப்பதன் மூலம், தனக்கு பிறகு தனது மகள் அதிகாரத்துக்கு வருவதை அவர் சூசகமாக சொல்வதாக சர்வதேச நோக்கர்கள் கருதுகின்றனர்.

    • அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியது.
    • நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றார் கிம் ஜாங் அன்.

    பியாங்யாங்:

    போர் அச்சுறுத்தல்களின் போது தங்களை பாதுகாத்துக்கொள்ள அணு ஆயுதங்களை தானாகவே பயன்படுத்துவதற்கான சட்டத்தை வடகொரியா இயற்றியுள்ளது. தனது அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் பேரழிவு நெருக்கடியைத் தடுக்க அணுகுண்டுகளை தானாகப் பயன்படுத்தலாம் என இந்தச் சட்டம் கூறுகிறது.

    இதுதொடர்பாக அந்நாட்டு பாராளுமன்றத்தில் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த சட்டம் நாட்டின் அணுசக்தி நிலையை உறுதிப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. நாட்டின் அணுசக்தியை வலுப்படுத்தும் எண்ணத்தை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என்றார்.

    அமெரிக்காவுடன் பெரிய அளவிலான ராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளும் தென் கொரியாவின் திட்டம் குறித்து கிம் ஜாங் அன் கூறுகையில், தென் கொரியாவின் நடவடிக்கை வடகொரியாவிற்கு ஆபத்தானது என தெரிவித்தார்.

    ×