search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jeyanthi"

    • பள்ளியின் மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு விழாவினை சிறப்பித்தனர்.
    • அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே ஆவுடையானூர் கிராமம் பொடினூரில் உள்ள சிவசக்தி வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    பள்ளியின் மாணவ-மாணவிகள் கிருஷ்ணன், ராதை வேடமிட்டு விழாவினை சிறப்பித்தனர். கிருஷ்ண ஜெயந்திக்கு செய்யப்படும் பூஜைகள் நடைப்பெற்றது. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும் முறைகளையும், காரணத்தையும் கிருஷ்ண ஜெயந்தி உருவானக் கதைகளையும் பள்ளி ஆசிரியை அருணாதேவி மாணவர்களுக்கு எடுத்து கூறினார். அனைத்து மாணவ மாணவியர்களும் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    மாணவர்கள் வெவ்வேறு விதமான இனிப்புகளைக் கொண்டு வந்து தங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டனர். கிருஷ்ணஜெயந்தி விழா கோலாகலமாக சிறப்பு பூஜைகளுடன் நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் துணையுடன் பள்ளி முதல்வர் நித்யா தினகரன் செய்திருந்தார்.

    ×