search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IT Employee dies"

    கப்பலூர் மேம்பாலம் இறக்கத்தில் லாரி மீது மொபட் மோதிய விபத்தில் மதுரை ஐ.டி. ஊழியர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
    பேரையூர்:

    திருமங்கலம் கலை நகரைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் கணேஷ்குமார் (வயது 32). இவர் மதுரை கோச்சடையில் உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். தினமும் மொபட்டில் வேலைக்கு சென்று வருவது வழக்கம்.

    நேற்று இரவு கணேஷ்குமார் வேலையை முடித்துவிட்டு ஹெல்மெட் அணிந்து கொண்டு மொபட்டில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    கப்பலூர் மேம்பாலம் இறக்கத்தில் சென்று கொண்டிருந்த போது மொபட் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதே வேகத்தில் அந்த வழியாக சென்ற லாரி மீது மொபட் மோதியது. இதில் கணேஷ்குமார் கீழே விழுந்தார்.

    அப்போது லாரியின் டயர் அவர் தலையில் ஏறி இறங்கியது. இதில் ஹெல்மெட் உடைந்து கணேஷ்குமார் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    விபத்து குறித்து தகவல் அறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம் அருகே உள்ள தோப்பூர் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன் (வயது 42). இவர் கப்பலூரில் உள்ள சிட்கோவிலில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வெளியே புறப்பட்டார்.

    4 வழிச்சாலையில் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த கண்ணன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு கண்ணன் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து திருமங்கலம் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ×