search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IN POKSO"

    • 17 வயது மாணவி கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார்.
    • ஞானபிரகாசம் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    சரவணம்பட்டி,

    சேலத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கல்லூரியில் இருந்து வெளியே சென்ற மாணவி கல்லூரிக்கு திரும்பவில்லை.

    இது குறித்து கல்லூரி நிர்வாகம் அவரது பெற்றோ ருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் உடனடியாக கோவை வந்து கோவி ல்பாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். மேலும் அவரது செல்போன் எண்ணில் யாரை எல்லாம் தொடர்பு கொண்டு பேசினார் என்பது குறித்தும் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், மாணவி சாத்தூரை சேர்ந்த டிரைவரான ஞானபிர காசம் (27) என்பவரிடம் அடிக்கடி போனில் பேசிய–து தெரியவந்தது.

    தொடர்ந்து நடத்தப்பட்ட விசார–ணையில் ஞானபிரகாசம் மாணவியை காதலிப்ப தாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஞா னபிரகாசத்தின் செல்போ ன் டவரை வைத்து தேடினர். அப்போது அவர் ராமேஸ்வரத்தில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மாணவியை மீட்டனர். மேலும் ஞானபிரகாசம் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    ×