search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ice cream"

    குழந்தைகளுக்கு சாக்லேட் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சாக்லேட் ஐஸ்கிரீமை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஹெவி கிரீம் - 1 1/2 கப்
    பால் - 1/2 கப்
    கோகோ பவுடர் - 1/4 கப்
    இன்ஸ்டன்ட் காபி தூள் - 1/2 தேக்கரண்டி
    சக்கரை - 1/2 கப்
    நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை) - 1/4 கப்
    உப்பு - 1/4 தேக்கரண்டி
    வெண்ணிலா எசென்ஸ் - 1/4 தேக்கரண்டி
    சாக்லேட் சிப்ஸ் - விருப்பத்திற்கு ஏற்ப.



    செய்முறை :

    பாலை நன்றாக காய்ச்சி பிரிட்ஜில் 2 மணி நேரம் குளிர வைத்து கொள்ளவும்.

    ஒரு அகன்ற பாத்திரத்தில் கோகோ பவுடர், சக்கரை, நாட்டு சக்கரை (கரும்பு சக்கரை), இன்ஸ்டன்ட் காபி தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

    அனைத்து நன்றாக கலந்த பின்னர் அதனுடன் காய்ச்சி குளிர வைத்த பால் சேர்த்து கைவிடாமல் கலக்கவும்.

    அடுத்து அதனுடன் ஹெவி கிரீம் மற்றும் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்கு கலக்கவும்.

    இந்தக் கலவையை ஒரு காற்றுப் புகாத பிளாஸ்டிக் டப்பாவில் போட்டு பிரிட்ஜ் ப்ரீசரில் 3 மணி நேரம் வைக்க வேண்டும். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்கிரீம் கலவையை எடுத்து அதை மிக்சியில் போட்டு 30 நொடிகள் வரை குறைவான வேகத்தில் அடித்து மீண்டும் டப்பாவில் போட்டு ப்ரீசரில் வைக்க வேண்டும்.

    இதே போல் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையும் மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து பிரிட்ஜ் ப்ரீசரில் வைக்கவும். இது போன்று 3 முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதனால் கட்டி சேராமல் ஐஸ்கிரீம் சாப்பிடுவதற்கு மென்மையாக இருக்கும்.

    கடைசியாக இதில் சாக்லேட் சிப்ஸ் சேர்த்து கலக்கி ஒரு இரவு முழுவதும் பிரிட்ஜ் பிரீசரில் வைத்து எடுத்து பரிமாறவும்.

    இப்போது சுவையான சாக்லேட் ஐஸ்கிரீம் தயார்!

    குறிப்பு:

    1. பிரீசரை அதிகமான குளிர்ச்சியில் வைக்கவும்.
    2. மிக்ஸியில் போட்டு 15 - 30 நொடி வரை சுற்றினால் போதுமானது. அதற்கு மேல் சுற்றினால் கிரீம் வெண்ணை ஆவதற்கு வாய்ப்புகள் அதிக வாய்ப்புள்ளது.
    3. அமுல் ஹெவி கிரீம் கொண்டு செய்து பாருங்கள். இல்லையெனில் 35% மேல் கொழுப்புள்ள எந்த கிரீம் வேண்டுமானாலும் உபயோகிக்கலாம்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று ஃபலூடா ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    ஐஸ்கிரீம் செய்ய தேவையான பொருட்கள் :

    பால் - 1 கப்
    ஓரம் நீக்கப்பட்ட பிரட் -3
    சர்க்கரை - 1/2 கப்
    எசன்ஸ் - 1 தேக்கரண்டி

    ஃபலூடா செய்ய தேவையான பொருட்கள் :

    வேகவைத்த சேமியா - 1 கப்
    ஜெல்லி - 1 கப்
    நறுக்கிய பழங்கள் (ஆப்பிள், திராட்சை, பப்பாளி, வாழைப்பழம்)
    செர்ரி பழம் -3



    செய்முறை :

    முதலில் பாலை நன்கு சுண்ட காய்ச்சி கொள்ள வேண்டும்.

    அதில் பிரட் துண்டுகளை போட்டு சிறிது நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

    பால் ஆறியதும் அதில் சிறிது சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து அந்த கலவையை ஒரு 4-மணி நேரம் ஃபிரீஸரில் வைத்து விட வேண்டும்

    பிறகு அந்த ஐஸ்கிரீம் கலவையில் எசன்ஸ் ஊற்றி மிக்ஸியில் போட்டு அடித்து விட வேண்டும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் மாற்றி 5 மணி நேரம் அப்படியே வைத்து விட வேண்டும்.

    ஒரு நீளமான கண்ணாடி டம்பளரில் முதலில் வேகவைத்த சேமியா போடவும்.

    பின்பு மேல் குறிப்பிட்ட அனைத்து பழங்களையும் ஒன்றன் பின் ஒன்றாக போடவும்.

    கடைசியாக அதன் மேல் ஐஸ்கிரீம், செர்ரிபழம், ஜெல்லி வைத்து ருசி பார்க்கவும்.

    சுவை மிகுந்த ஃபலூடா ஐஸ்கிரீம் தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்சனை இல்லை.
    ஐஸ்க்ரீமை வாயில் போட்டவுடன் கரைய வேண்டும் என்பதற்காக அதில் சில வேதிப் பொருளைப் பயன்படுத்துகின்றனர். இதில் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதுதான் ஐஸ்க்ரீமின் சுவையை அதிகப்படுத்தி நம்மை திரும்பத் திரும்ப சாப்பிடத் தூண்டுகிறது.

    பொட்டாசியம் கார்பைடு மற்றும் செயற்கையான நிறமிகளை சர்க்கரைப் பாகுடன் கலந்து அதை கெட்டியாக்கி அதன் பிறகு ஐஸ்க்ரீமில் பயன்படுத்துகின்றனர். இதுபோன்று சேர்க்கப்படும் வேதிப் பொருள்களால் பல்வேறு உடல்நல பிரச்னைகள் ஏற்படுகிறது.

    ‘‘ஐஸ்க்ரீம் தயாரிக்கப் பயன்படுத்தும் பாலில் அது கெடாமல் இருப்பதற்காக சில வேதிப்பொருள்கள் சேர்க்கப்படுகிறது. ஐஸ்க்ரீம் தயாரிக்கும்போது அதில் சேர்க்கப்படும் Sodium benzoate என்கிற வேதிப்பொருள் பொதுவாக அழகுசாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது.

    மேலும் ஐஸ்க்ரீம் எளிதில் உருகாமல் இருப்பதற்காக அதில் Polysorbate-80 என்கிற வேதிப்பொருளைப் பயன்படுத்துகின்றனர். இப்பொருள் சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இது நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இதனால் உடலில் அலர்ஜி ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதுமட்டுமல்ல பரம்பரையாக வரக்கூடிய புற்றுநோய்களின் வளர்ச்சியைத் தூண்டும் வாய்ப்புகளும் அதிகம் உள்ளது.

    வெனிலா எசன்சுக்குப் பதிலாக ஒரு மலிவான மாற்றுப் பொருளாக Piperonal என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது. National Library of Medicine-ன் Hazardous Substances Data Bank (HSDB) ஆனது. இதை மிதமான நச்சுத்தன்மையுடைய பொருளென்றும், மனித தோலில் எரிச்சல் உண்டாக்கும் பொருளென்றும் பட்டியலிட்டுள்ளது. Pineapple எசன்சுக்குப் பதிலாக Ethyl Acetate என்கிற வேதிப்பொருள் சேர்க்கப்படுகிறது.



    இது தோல் மற்றும் துணி உற்பத்தியின்போது அவற்றை சுத்தப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இதன் நீராவியானது நாள்பட்ட நுரையீரல், கல்லீரல் மற்றும் இதய சேதம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உண்டாக காரணமாகிறது. செர்ரி எசன்சுக்குப் பதிலாக பயன்படுத்தப்படும் Aldehyde C-17 என்கிற எரியக்கூடிய திரவப் பொருளானது சாயங்கள், பிளாஸ்டிக், ரப்பர் போன்றவை உற்பத்தி செய்யும்போது பயன்படுத்தப்படுகிறது.’’

    ‘‘அதிக சர்க்கரை, கெட்ட கொழுப்பு, பல்வேறு ரசாயனக் கலவைகளால் தயாரிக்கப்படும் ஐஸ்க்ரீம் பருமன் உள்ளிட்ட பல உடல்நலப் பிரச்சனைகளை உண்டாக்கும். ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் பொட்டாசியம் கார்பைடு என்கிற வேதிப்பொருளால் அசதி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. சிலர் ஐஸ்க்ரீமில் சேர்க்கப்படும் முட்டைக்குப் பதிலாக Diethylene glycol (DEG) என்கிற பொருளைப் பயன்படுத்துகின்றனர்.

    இது என்சின்களின் உறைவுத் தன்மைக்கு எதிராக செயல்படுகிற பொருளாகவும், Paint remover-ஆக பயன்படும் பொருட்களில் ஒன்றாகவும் உள்ளது. இந்தப் பொருளால் சிறுநீரகப்பை மற்றும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படக்கூடும். இது போன்ற தீங்கான மூலப்பொருட்கள் நமது குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களின் அழிவிற்குக் காரணமாகிறது. மேலும் இதனால் அல்சர், புற்றுநோய், இதயவலி மற்றும் செரிமானப் பிரச்சனைகளும் உண்டாகிறது.

    எனவே, முடிந்தவரை ஐஸ்க்ரீம் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது. தவிர்க்க முடியாத பட்சத்தில் எப்போதாவது சாப்பிடுவதாலும் பெரிய பிரச்சனை இல்லை. கலப்படங்கள் நிறைந்ததாகவே இன்று சந்தைகளில் ஐஸ்க்ரீம் விற்கப்படுவதால் அடிக்கடி சாப்பிடுவது நிச்சயம் ஆரோக்கியக் கேட்டினையே உண்டாக்கும்!’’ 
    ×