search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Husband and wife who drowned in the well"

    • சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.
    • சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார்.

    திருச்செங்கோடு:

    ஈரோடு மாவட்டம் கருக்கம் பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (35). இவரது மனைவி மகேஸ்வரி (29). இவர்களுக்கு தேவதர்ஷன் (8), என்ற மகனும், நிகிதா (4) என்ற மகளும் உள்ளனர்.

    தொழிலாளர்கள்

    இவர்கள் தற்போது நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர் குத்திப் பாளையம் சங்கங்காடு பகுதியில் வசித்து வந்தனர். சோமசுந்தரம் அந்த பகுதியில் உள்ள ஒரு விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலைப்பார்த்து வந்தார். மகேஸ்வரி கோன் அட்டை மில்லில் ேவலைப்பார்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சோமசுந்தரம், தனது மனைவி மகேஸ்வரியை நீச்சல் கற்று கொடுப்பதாக கூறி அருகில் உள்ள ஒரு கிணற்றுக்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு அவர்தனது மனைவிக்கு நீச்சல் கற்று கொடுத்து கொண்டு இருந்தார்.

    தண்ணீரில் மூழ்கினர்

    அப்போது மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் ஆகியோர் கிணற்றில் அடுத்தடுத்து மூழ்கி பலியானார்கள். இதுப்பற்றி தெரியவந்ததும் திருச்செங்கோடு ரூரல் போலீசார் மற்றும் திருச்ெசங்கோடு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பலியான சோமசுந்தரம் மற்றும்அவரது மனைவி மகேஸ்வரி ஆகியோரின் உடல்களை மீட்டனர். பின்னர் அவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இன்று அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

    சோமசுந்தரத்துக்கு நீச்சல் தெரிந்த நிலையில் அவரும், அவரது மனைவியும் எப்படி இறந்தார்கள் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×