search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Houthi attack"

    • எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படை கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர்.
    • இந்திய கடற்படை கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்புக்குழுவினர் அனுப்பப்பட்டுள்ளனர்.

    புதுடெல்லி:

    இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போரில் ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளனர். இதில் செங்கடலில் பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதையடுத்து ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா, இங்கிலாந்து இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

    இந்நிலையில், ஏடன் வளைகுடா பகுதியில் இங்கிலாந்தின் மார்லின் லுவாண்டா எண்ணெய் கப்பலை இன்று ஹவுதி அமைப்பினர் தாக்கினர். ஏவுகணை மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் எண்ணெய் கப்பலில் தீப்பற்றியது. அந்த எண்ணெய்க் கப்பலில் 22 இந்தியர்கள், வங்காளதேசத்தைச் சேர்ந்த ஒருவர் என 23 பேர் உள்ளனர்.

    இதையடுத்து எண்ணெய் கப்பலில் இருந்தவர்கள் இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர்.

    தொடர்ந்து, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்புக்குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர்.

    அரபிக்கடல் மற்றும் ஏடன் வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களைத் தொடர்ந்து, இந்திய கடற்படை தனது போர்க் கப்பல்களை தயார்நிலையில் நிறுத்தி கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×