search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Hima Das"

    உலக ஜூனியர் தடகளத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாசுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து தெரிவித்தனர். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    தாம்ப்ரே:

    பின்லாந்தில் நடந்து வரும் உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் (20 வயதுக்குட்பட்டோர்) இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக அளவிலான தடகளத்தில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்த முதல் இந்திய மங்கை என்ற புதிய சரித்திர சாதனையை அவர் படைத்தார். தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, பதக்கமேடையில் நின்ற அவரது கண்களில் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏழ்மையான விவசாய குடும்பத்தை சேர்ந்த ஹிமாதாசின் சொந்த ஊர், அசாம் மாநிலம் நாகாவ்ன் மாவட்டத்தில் உள்ள திங் கிராமம் ஆகும். உடன் பிறந்தவர்கள் 4 பேர். ஹிமா தாசின் மகத்தான வெற்றியால் அந்த கிராமமே உற்சாகம் பூண்டுள்ளது. 18 வயதான ஹிமா தாஸ் கூறுகையில் ‘தேசத்திற்காக பதக்கத்தை கொண்டு வருவது மிகப்பெரிய சாதனையாகும். இந்திய மக்களுக்கு இந்த பரிசை அளிப்பது மிகவும் பெருமை அளிக்கிறது. உலக சாம்பியன் ஆனதன் மூலம் எனது கனவு நனவாகி உள்ளது. அடுத்து வரும் ஆசிய விளையாட்டிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சிபேன்’ என்றார்.



    புயல்வேக ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமாதாசுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.



    பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ஹிமா தாசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையால் தேசம் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறது. அவரது சாதனை இளம் வீரர், வீராங்கனைகளுக்கு நிச்சயம் உந்து சக்தியாக இருக்கும்’ என்று கூறியுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியில், ‘51.46 வினாடிகளில் இலக்கை எட்டியது என்பது அவரது கடின உழைப்புக்கு கிடைத்த பரிசு. புதிய சகாப்தத்தில் இது வெறும் தொடக்கம் தான். இன்னும் நிறைய பதக்கங்களை அவர் வெல்வார்’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். #HimaDas #WorldJuniorAthletics #Modi
    இந்தியாவை பெருமைப்படுத்திய ஹிமா தாஸ் ஆங்கில திறனை குறிப்பிட்ட இந்திய தடகள சம்மேளனத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. #HimaDas
    புதுடெல்லி:

    பின்லாந்தில் சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் போட்டி ஜூலை 10 ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார். ஹிமா தாசுக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி மற்றும் அரசியல்வாதிகள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதற்கிடையே இந்திய தடகள சம்மேளனம் அவருடைய ஆங்கில திறனை குறிப்பிட்டு வெளியிட்ட டுவிட் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.

    இந்திய தடகள சம்மேளனம் செய்துள்ள டுவிட் செய்தியில், போட்டியில் வெற்றிப்பெற்று ஹிமா தாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்  “மிகவும் தெளிவாக ஆங்கில திறனுடன் பேசவில்லை, ஆனால் அவரால் முடிந்ததை கொடுத்தார். உன்னால் பெருமையடைகிறோம், இந்த அதிரடியான வெற்றியை தொடருங்கள்,”என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து டுவிட்டர்வாசிகள் இந்திய தடகள சம்மேளனத்தை கடுமையாக விமர்சனம் செய்ய தொடங்கினர். ஆங்கில திறனை குறிப்பிட்டதை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். 

    ரோகித் ராம் என்ற இளைஞர் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், மைதானத்தின் தன்னுடைய திறமையை காட்டவே டம்பெர் நகரம் சென்றுள்ளாரே தவிர ஆங்கிலப் புலமையை காட்டுவதற்கு கிடையாது. உங்களுடைய கருத்து வெட்கக்கரமானது என பதிவிட்டுள்ளார். 

    #HimaDas speking to media after her SF win at #iaaftampere2018@iaaforg Not so fluent in English but she gave her best there too. So proud of u #HimaDas Keep rocking & yeah,try ur best in final! @ioaindia@IndianOlympians@TejaswinShankar@PTI_News@StarSportsIndia@hotstartweetspic.twitter.com/N3PdEamJen

    — Athletics Federation of India (@afiindia) 12 July 2018
    இதற்கு பதில் அளித்துள்ள சம்மேளனம், “நீங்கள் மீண்டும் டுவிட்டர் படிக்க வேண்டும், அதனை முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும், இதுபோன்ற ட்ரோலை நிறுத்த வேண்டும்,” என குறிப்பிட்டுள்ளது. இருப்பினும் ஹிமா தாஸ் ஆங்கில திறன்பற்றிய இந்திய தடகள சம்மேளனத்தின் டுவிட்டிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. நீங்கள் ஆங்கிலத்தை இதில் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? விளையாட்டு வீரர்களுக்கு ஆங்கிலம் என்ன அவசியமா? என்ற கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. நீங்கள் ஆங்கிலத்தில் புலமை கொண்டவர்கள்தானே ஏன் speking என தவறாக பதிவு செய்துள்ளனர் எனவும் பதிலடியை கொடுத்து வருகிறார்கள். #HimaDas
    ஒலிம்பிக் பதக்கம் இலக்கு திட்டத்தில் தடகள வீரர்- வீராங்கனைகள் 6 பேரை மத்திய விளையாட்டுத்துமறை அமைச்சகம் சேர்த்துள்ளது. #TOPS
    ஒலிம்பிக்கில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவதற்காக இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் ஒலிம்பிக் பதக்கம் இலக்கு திட்டம் (Target Olympic Podium Scheme- TOPS) ஒன்றை உருவாக்கியது.

    சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இந்த திட்டத்தின் கீழ் சேர்த்து வெளிநாட்டில் பயிற்சி மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகளுக்காக இவர்கள் அதிக அளவில் நிதி ஒதுக்கப்படும்.

    இந்த திட்டத்தில் தற்போது தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 6 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 2012-ம் ஆண்டு நடைபெற்ற லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற துப்பாக்கி சுடுதல் வீரர் நரங் உள்பட 12 வீரர்கள் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் காமன்வெல்த் போட்டி முடிவடைந்த பிறகு வீரர்களை தேர்வு செய்யும் குழு கூடியது. இந்த திட்டத்தின் கீழ் யாரையெல்லாம் சேர்ப்பது, யாரையெல்லாம் நீக்குவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

    இதில் இரண்டு பளுதூக்கும் வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களின் காலவரையறை 2018 காமன்வெல்த் வரைதான் இருந்தது. தற்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் துப்பாக்கி சுடுதல் வீரர் நரங் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று ஒரு பதக்கம் கூட வெல்லவில்லை.



    காமன்வெல்த் போட்டியில் 18 வயதே ஆன இளம் வீராங்கனையான ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தின் இறுதிப் போட்டியில் 51.32 வினாடிகளில் கடந்து அசத்தினார். மேலும் 4X400 மீட்டர் தொடர் ஓட்டத்திலும் இடம்பிடித்தார். இதனால் அவர் TOPS திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    நவ்ஜீத் கவுர் திலோன், அகில் ஷியோரன், எலாவெனில் வாளரிவான், ராகி ஹால்டர் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ×