search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Government approves"

    அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக, மேலும் 2 பெட்ரோலிய பொருள் சேமிப்பு நிலையங்களை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #OilStorage #PiyushGoyal
    புதுடெல்லி:

    கடந்த 1990-ம் ஆண்டு வளைகுடா போர் வெடித்தது. அப்போது, இந்தியாவின் கைவசம் இருந்த பெட்ரோலிய பொருட்கள், 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தது.

    இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன், விலை கடுமையாக உயர்ந்தது. அதுபோன்ற நிலைமை மீண்டும் வந்துவிடக்கூடாது என்பதில், மத்திய அரசு எச்சரிக்கையாக உள்ளது.

    அந்த அடிப்படையில், ரூ.4 ஆயிரத்து 100 கோடி செலவில், தென்னிந்தியாவில் 3 பெட்ரோலிய பொருள் சேமிப்பு நிலையங்களை அமைத்தது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை தரைக்கு அடியில் கட்டப்பட்டுள்ளன.

    இவற்றில், படூரில் மட்டும் இன்னும் எண்ணெய் சேமித்து வைக்கப்படவில்லை. மற்ற 2 இடங்களிலும் மொத்தம் 53 லட்சத்து 30 ஆயிரம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும். இவை 10 நாட்களுக்கான பெட்ரோலிய பொருள் தேவையை பூர்த்தி செய்யும்.

    இந்நிலையில், மேலும் 2 அவசர கால பெட்ரோலிய சேமிப்பு நிலையங்களை அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

    ஒடிசா மாநிலம் சந்திக்கோல் பகுதியிலும், கர்நாடக மாநிலம் படூரிலும் புதிய பெட்ரோலிய சேமிப்பு நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. சந்திக்கோலில் அமையும் நிலையத்தில், 44 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும்.

    படூரில் அமையும் நிலையத்தில், 25 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்க முடியும். இவற்றின்மூலம் மொத்தம் 69 லட்சம் டன் கச்சா எண்ணெயை சேமித்து வைக்கலாம். இவை 12 நாட்களுக்கான பெட்ரோலிய பொருட்களின் தேவையை பூர்த்தி செய்யும் என்று மத்திய மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார்.  #OilStorage #PiyushGoyal  #Tamilnews
    ×