search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gold crowns theft"

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் 3 தங்க கிரீடம் திருடியதாக கருதப்படும் வாலிபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டனர். #GovindarajaSwamyTemple
    திருமலை:

    திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கல்யாண வெங்கடேஸ்வர சாமி, ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு அலங்கரிக்க கூடிய 3 தங்க கிரீடங்கள் கடந்த 2-ந்தேதி மாயமானது.

    இதுகுறித்து திருப்பதி போலீசார் வழக்கு பதிவு செய்து 6 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள 12 சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    இதில் சந்தேகத்திற்கிடமாக வாலிபர் ஒருவர் கோவிலில் இருந்து வேகமாக ஓடிவந்து வெளியேறுகிறார். அந்த வாலிபர் தான் தங்க கிரீடங்களை திருடியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அந்த புகைப்படத்தை அடையாளம் கண்ட போலீசார் நேற்று அதனை வெளியிட்டனர்.



    புகைப்படத்தில் காணப்படும் வாலிபர் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். மேலும் தகவல் தருபவரின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தெரிவித்தனர்.  #Tirupati #GovindarajaSwamyTemple
    ×