search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "garlic"

    • ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையானது.
    • வெளியூர் வரத்தும் குறைந்ததால் மேலும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்,

    மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் காய்கறி மண்டி செயல்பட்டு வருகிறது. இங்கு நீலகிரி மாவட்டத்தில் விளையும் உருளைக்கிழங்கு, முட்டைக் கோஸ், பூண்டு, தக்காளி, டர்னீப், கேரட், பீன்ஸ், பீட்ரூட், வெள்ளைப்பூண்டு, இஞ்சி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்து ஏலமுறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிக்கு கர்நாடகா, ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உருளைக்கிழங்கும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல்பிரதேசம், காஷ்மீரில் இருந்து வெள்ளைப்பூண்டும் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படுகிறது.

    அதேபோல மத்திய பிரதேசம், ராஜஸ்தான், இமாச்சல் பிரதேசம் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெள்ளைப்பூண்டு கொண்டு வரப்பட்டு விற்கப்பட்டு வருகிறது.

    ஊட்டியில் தற்போது வெள்ளைப்பூண்டு சீசன் இல்லை. எனவே வெளிமாநில வெள்ளைப்பூண்டு மட்டுமே தற்போது அதிகளவில் விற்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையம் காய்கறி மண்டியில் தற்போது வெளிமாநில பூண்டு கிலோவுக்கு ரூ.85 முதல் அதிகபட்சமாக ரூ.145 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    அடுத்தபடியாக இருப்பு வைக்கப்பட்ட ஊட்டி வெள்ளைப்பூண்டு கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அதே நேரத்தில் வெள்ளைப்பூண்டு விலை ஏற்றத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து வெள்ளைப் பூண்டு மண்டி உரிமையாளர் ஜோசப் பேபி கூறுகையில், கடந்த ஆண்டு வெள்ளைப் பூண்டிற்கு போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.50 வரை மட்டுமே விற்பனை ஆனது.எனவே விவசாயிகளில் 50 சதவீதம் பேர் வெள்ளைப் பூண்டு பயிரிடுவதில் போதிய ஆர்வம் காட்டவில்லை.

    இதனால் தற்போது வரத்து குறைவாக உள்ளது. எனவே, ஊட்டி வெள்ளைப் பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.150 முதல் ரூ.350 வரை விற்பனையாகிறது.

    வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் வெள்ளைப்பூண்டு கிலோ ஒன்றிற்கு ரூ.85 முதல் ரூ.145 வரை விற்பனையாகிறது. இந்த விலையேற்றம் இனிவரும் காலங்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

    உடலில் சில நோயின் அறிகுறி இருப்பவர்கள் உணவில் பூண்டு சேர்த்து கொள்வதை தவிர்த்து விடுவது நல்லது. எந்த நோய் உள்ளவர்கள் பூண்டை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.
    தீக்காயம் ஏற்பட்டவர்கள் பூண்டை அதிகமாக சாப்பிட்டால் உடம்பில் வீக்கம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

    கல்லீரல் கோளாறுகள் இருப்பவர்கள் பூண்டை உட்கொள்வதை நிறுத்திக் கொள்ளுங்கள். இது கல்லீரல் கோளாறுக்கு எடுக்கும் மருந்துகளின் தாக்கத்தை  குறைக்க செய்கிறது.

    வயிற்றுப்போக்கு கோளாறால் அவதிப்படும் நபர்கள் பூண்டை உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் இயக்கத்தை ஊக்கப்படுத்தி வயிற்றுப் போக்கை  அதிகப்படுத்தும்.

    கண் சார்ந்த நோய் மற்றும் கோளாறுகள் இருக்கும் நபர்கள் பூண்டை சேர்த்து உணவை சாப்பிட்டால் கண்களின் ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடிய வாய்ப்புகள்  உள்ளது.

    அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளப்போகும் நபர்கள் இரண்டு வாரத்திற்கு முன்னரே பூண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து விடுங்கள்.

    பூண்டு இரத்த அழுத்தத்தை குறைக்கும் திறன் கொண்டுள்ளது. எனவே குறைந்த இரத்த அழுத்தம் இருக்கும் நபர்கள் பூண்டை தவிர்த்து விடுவது நல்லது.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×