search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gangaikondan Sipcot"

    • மாவட்ட அறிவியல் மையத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்த பயிலரங்கம் நடந்தது.
    • கங்கைகொண்டான் பகுதியில் ஆய்வு செய்து விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட அறிவியல் மையத்தில் சாலை பாதுகாப்பை மேம்படுத்துதல் குறித்த பயிலரங்கம் நடந்தது. இதற்கு மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அறிமுக உரையை சி.ஏ.ஜி ஆராய்ச்சியாளர் வர்ஷா வாசுகி வழங்கினார். இதில் ஐஐடி பேராசிரியர்கள் வேதகிரி, மோசஸ் சாந்தகுமார், முதுநிலை திட்ட ஆலோசகர் சந்தீப் கெய்க்வாட், ராஜு, வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட அறிவியல் அதிகாரி எஸ்.எம்.குமார், அறிவியல் அதிகாரி மாரி லெனின், நிர்வாக இயக்குனர் சரோஜா, மூத்த ஆராய்ச்சியாளர் சுமனா நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது:-

    நெல்லை மாவட்டத்தில் விபத்துக்களை தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக நெல்லை கங்கைகொண்டான் சிப்காட் பகுதியில் நான்கு வழிச்சாலையில் அதிக விபத்துக்கள் நடைபெற்று வந்தது.

    சராசரியாக ஆண்டு முழுவதும் இந்த பகுதியில் 12-க்கும் மேற்பட்ட விபத்து இறப்பு நிகழ்வு நடந்து வந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஆய்வு செய்து விபத்துக்கள் நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் அங்கே செயல்படுத்தப்பட்டது.

    இதன் காரணமாக இப்போது விபத்து இல்லாத ஒரு பகுதியாக மாறி வருகின்றது. இன்று தமிழகத்தில் அரசு விபத்து நடந்தவுடன் 24 மணி நேரத்திலே இன்னுயிர் காப்போம் என்ற திட்டத்தின் மூலமாக பல்வேறு உயிர்கள் காக்கப்பட்டு வருகிறது. விபத்தில்லா நெல்லையாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்.

    ×