search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gang Fight"

    • ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள குளக்கரை சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மேலப்பாவூர் கிராமத்தில் இரு பிரிவினருக்கிடையே கடந்த 2 மாதங்களாக அவ்வப்போது மோதல்கள் எழுந்த நிலையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இந்நிலையில் நேற்று ஒரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் அங்குள்ள குளக்கரைக்கு சென்றதாகவும், அதனை மற்றொரு பிரிவை சேர்ந்த இளைஞர்கள் தட்டிக் கேட்டு ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இரு பிரிவினர் இடையே மோதல் போக்கு உருவாகும் நிலை ஏற்பட்டதால் உடனடியாக தென்காசி போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், அவர்க ளிடையே பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது எஸ்.பி.க்கும், ஒரு பிரிவை சேர்ந்த மக்களுக்கும் இடை யே திடீர் வாக்கு வாதம் ஏற்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×