என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Ganesha Chaturthi"
- விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் 22-ந் தேதி தொடங்குகிறது.
- வருகிற 30-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா பல்வேறு கட்டுப்பாடு களுடன் நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான விழா வருகிற 22-ந்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த ஆண்டு விழாவை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விழா நாட்களில் இரவு கற்பகவிநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். முதல் நாள் இரவு மூஷிக வாகனத்திலும், 2-ம் நாள் சிம்ம வாகனத்திலும், 3-ம் நாள் பூத வாகனத்திலும், 4-ம் நாள் கமல வாகனத்திலும், 5-ம் நாள் ரிஷிப வாகனத்திலும் கற்பக விநாயகர் எழுந்தருளி வீதி உலா நடக்கிறது.
6-ம் நாள் விழாவான வரும் 27-ந் தேதி மாலை 4.30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ம் நாள் திருவிழாவில் மயில் வாகனத்திலும், 8-ம் நாள் திருவிழா அன்று குதிரை வாகனத்திலும் கற்பகவிநாயகர் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது.
9-ம் நாள் திருவிழா வான 30-ந் தேதி காலை திருத்தேருக்கு கற்பகவிநாயகர் எழுந்த ருளல் நிகழ்ச்சியும், மாலை தேரோட்டமும் நடக்கிறது.
- 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
- ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது.
பல்லடம் :
விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்து முன்னணி சார்பில் கோவை, திருப்பூர், ஊட்டி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக பல்லடம் அருகே அலகுமலை பகுதியில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது.இந்த பணியில் 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு பகலாக சிலைகளை செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள சிற்பக் கலைஞர்கள் அங்கேயே தங்கி பணிகளை விரைந்து முடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் மற்றும் மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் ஆகியோர் கூறியதாவது:-
தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா ஒவ்வொரு ஆண்டும் மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. பொது மக்களும் ஆர்வமுடன் விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறது. 3 அடி முதல் 11 அடி வரை சிலைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் கருட வாகனத்தில் அமர்ந்த விநாயகர், ரத விநாயகர், சித்தி புத்தி விநாயகர், பிள்ளையார்பட்டி விநாயகர், சிவன் பார்வதி விநாயகர் என பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் அனைத்தும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் பொருட்களைக் கொண்டு இயற்கையான வண்ணங்கள் தீட்டப்பட்டு சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு அந்தந்த பகுதிகளுக்கு சிலைகள் அனுப்பப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்