என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "friend suicide Shelby"
திருப்பதி:
திருப்பதி அடுத்த தானிமேடு காலனியை சேர்நதவர் சிவக்குமார் (25). இவர் தனியார் பைக் ஷோரூமில் மெக்கானிக்காக வேலை செய்து வந்தார். இவருடைய பெற்றோர் கரக்கம்பாடி மங்கலத்தில் வசித்து வருகின்றனர். சிவக்குமார் மட்டும் ஹவுஸ் போர்டில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.
நேற்று காலை வேலைக்கு சென்ற சிவக்குமார் பிற்பகல் வீட்டிற்கு வந்து மது அருந்தினார். பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்வதுபோல் செல்பி எடுத்து அவருடைய நண்பர் சிவாவிற்கு அனுப்ப முடிவு செய்தார்.
மின்விசிறியில் சேலையை மாட்டி ஒரு காலை கட்டில் மீதும் இன்னொரு காலை டேபிள் மீதும் வைத்து சேலையை முடிச்சு போட்டு கழுத்தில் மாட்டியுள்ளார்.
பின்னர் செல்பி எடுத்த படத்தை நண்பருக்கு அனுப்பிவிட்டு கீழே இறங்குபோது கால் தவறியது. இதனால் கழுத்தில் மாட்டியிருந்த சேலை இறுக்கியது. இதனால் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.
நண்பர் தற்கொலை செய்வதுபோல் வந்த செல்பி படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவா, சிவக்குமாருக்கு போன் செய்தார். போன் எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சிவா சிவக்குமார் வீட்டுக்கு விரைந்து வந்தார். அங்கு சிவக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் சேலை இறுக்கி பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து திருச்சானூர் போலீசாருக்கு சிவா தகவல் அளித்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாலிபரின் பிணத்தை மீட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Selfie
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்