search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "flying squad"

    • வேன் ஒன்றை மறித்து பறக்கும் படையினர் சோதனை மேற்கெண்டனர்.
    • பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    சென்னை:

    சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக 24 மணி நேரமும் பறக்கும் படையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். ராஜா அண்ணாமலைபுரம் 3-வது குறுக்கு தெருவில் வேன் ஒன்றை மறித்து பறக்கும் படையினர் சோதனை மேற்கெண்டனர்.

    இதில் ரூ.1 கோடியே 81 லட்சம் பணம் இருந்தது. அந்த பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில் ஏ.டி.எம். மையத்துக்கு கொண்டு செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    • டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
    • கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    ராசிபுரம்:

    சேலம் அருகே உள்ள மல்லூர் பகுதியில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் அதிகாரிகள் இன்று வாகன சோதனை செய்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அ.தி.மு.க. கட்சி சின்னம் பதித்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிசர்ட்டுகள் இருப்பது தெரிய வந்தது. டி சர்ட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி கண்டெய்னர் லாரி டிரைவர் மூர்த்தி (48) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் இந்த டி சர்ட்டுகள் கரூர், மதுரைக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட டி சர்ட்டுகளின் மதிப்பு ரூ.2லட்சத்து 36ஆயிரத்து 250 என தெரிய வந்தது. இதையடுத்து கண்டெய்னர் லாரியை வெண்ணந்தூர் போலீசில் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

    • பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    • மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, மஞ்சவாடி கணவாய் வெள்ளையப்பன் கோவில் சோதனை சாவடியில், கடந்த 21-ந் தேதி நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் பாக்கியம் தலைமையிலான குழுவினர் சேலத்தில் இருந்து அரூர் நோக்கி வந்த காரை சோதனை செய்தனர்.

    அப்போது பறையப்பட்டி புதூரைச் சேர்ந்த மோகன் வந்த காரில், 96, 500 ரூபாய் இருந்தது தெரிய வந்தது. இதை பறிமுதல் செய்து அதிகாரிகள் மூலம் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    பின், மோகன் மாவட்ட அளவிலான குழுவில் மேல் முறையீடு செய்து பணத்தை திரும்ப ஒப்படைக்க ஆணை பெற்றார்.

    இதைத்தொடர்ந்து உதவி தேர்தல் அலுவலர் செர்லி ஏஞ்சலா, தாசில்தார் சரவணன், தனி தாசில்தார் பெருமாள் தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம் ஆகியோர் மோகனிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.96,500-யை திரும்ப ஒப்படைத்தனர்.

    • ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
    • பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    பாராளுமன்றத் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணிக்க பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு, செலவின கண்காணிப்பு குழு உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு 3 பறக்கும் படையினர் வீதம் 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு 24 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மட்டும் கூடுதலாக ஒரு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மொத்தம் 25 பறக்கும் படை அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிரமாக வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர தேர்தல் விதி மீறல்கள் குறித்து பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் சிவிஜில் செயலி, டோல்பிரி எண் ஆகியவற்றில் புகார் அளிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை 7 மணி முதல் நேற்று காலை 7 மணி வரை 24 மணி நேரத்தில் 58 விதி மீறல் தொடர்பான புகார்கள் வந்துள்ளது. கட்டுப்பாட்டு அறையின் டோல் ப்ரீ எண்ணுக்கு 39 புகார்களும், சி விஜில் செயலி மூலம் 19 புகார் என மொத்தம் ஒரே நாளில் 58 புகார்கள் வந்துள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதில் 58 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தலா 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    24 மணி நேரமும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். திருவிதாங்கோடு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் அந்த வழியாக வந்த கார் ஒன்றை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் தி.மு.க. துண்டு பிரசுரங்கள் இருந்தது தெரியவந்தது. காரில் இருந்த சுமார் 12,000 துண்டு பிரசுரங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தி.மு.க. நிர்வாகி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதேபோல் பறக்கும் படை சோதனையில் நேற்று காலை முதல் இன்று காலை வரை ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 720 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 3 இடங்களில் பறக்கும் படை அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். ரூ.2,66,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    கன்னியாகுமரி தொகுதியில் ரூ.65,400 குளச்சல் தொகுதியில் ரூ.2 லட்சத்து 800 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.1 கோடியே 16 லட்சத்து 29 ஆயிரத்து 927 பணத்தை பறிமுதல் செய்தனர்.

    • பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இதை அடுத்து வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது முதல் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பு குழுவினர் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நேற்று வரை மேற்கொண்ட சோதனையில் மொத்தம் ரூ.66 லட்சத்து 45 ஆயிரத்து 797 கைப்பற்றி உள்ளனர்.

    இதேபோல் ஈரோடு மேற்கு தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை ரூ. 58 லட்சத்து 11 ஆயிரத்து 390-ம், மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.7 லட்சத்து 82 ஆயிரத்து 670-ம், பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.21 லட்சத்து 41 ஆயிரத்து 280-ம், பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.18 லட்சத்து 78 ஆயிரத்து 800-ம், அந்தியூர் தொகுதியில் ரூ.4 லட்சத்து 84 ஆயிரத்து 850-ம், கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.20 லட்சத்து 65 ஆயிரத்து 650-ம், பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.62 லட்சத்து 86 ஆயிரத்து 948-ம் கைப்பற்றப்பட்டுள்ளது.

    ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கைப்பற்றப்பட்ட தொகை மொத்தம் ரூ.2 கோடியே 60 லட்சத்து 97 ஆயிரத்து 385 ஆகும்.

    இதில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து ரூ.1 கோடியை 71 லட்சத்து 89 ஆயிரத்து 595 உரிமையாளர்களிடம் பணம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.89 லட்சத்து 7 ஆயிரத்து 790-ஐ மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

    • பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    திசையன்விளை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நெல்லை மாவட்டம் முழுவதும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அந்த வகையில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆயன்குளம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ரமேஷ் தலைமையில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5 லட்சத்து 82 ஆயிரத்து 245 இருந்தது. அந்த வாகனத்தில் வந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில் அவர் திசையன்விளையை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ராஜதுரை (வயது 29) என்பது தெரிய வந்தது.

    சிகரெட் வியாபாரியான அவர் விற்பனையை முடித்துவிட்டு அதற்கான பணத்தை பெற்று வந்ததாக தெரிவித்தார். ஆனால் அதற்குரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதனால் அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து திசையன்விளை தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடியை அடுத்த கக்கன் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக ஒரு காரில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.

    அவரது காரில் சுமார் 35 பவுன் தங்கநகை, 140 செட் பரிசு பொருட்கள் மற்றும் ஏராளமான சேலைகள் இருந்தன. அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

    காரில் வந்த நபர் திசையன்விளை அருகே உள்ள அழகியவிளையை சேர்ந்த ராஜேந்திரன்(வயது 48) என்பதும், தற்போது ஈரோடு மாவட்டம் பவானியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தார்.

    மேலும் சொந்த ஊரில் நடைபெறும் அய்யா கோவில் திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்குவதற்காக பரிசு பொருட்கள் எடுத்து செல்வதாகவும், 35 பவுன் தங்க நகைகள் தனது குடும்பத்தினருடையது என்றும் கூறினார்.

    ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் முறையாக இல்லை என்பதால் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து நாங்குநேரி தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

    • தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குளத்துப்பாளையம் அருகே தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த கட்டிட என்ஜினீயர் செந்தமிழ் செல்வன் என்பவரிடம் சோதனை செய்தனர். அப்போது அவர் ரூ.10 லட்சம் பணம் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து விசாரித்த போது அவர், கட்டுமான பணிக்காக ரூ.10 லட்சத்தை முன்பணமாக பெற்று சென்றதாக தெரிவித்தார். ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.
    • பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி சோதனை சாவடியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்து செல்லப்படும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் கட்டுகட்டாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் இரவில் உரிய ஆவணங்களை இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன.

    புதுச்சேரியையொட்டிய மாநில எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பறக்கும் படையினர், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், மேற்பார்வையிடவும் தேர்தல் பொது பார்வையாளராக பியூஷ் சிங்லாவும், தேர்தல் காவல் பார்வையாளராக அமன்தீப் சிங்ராய் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தேர்தல் காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள அமன்தீப் சிங் ராய் புதுச்சேரி எல்லைப் பகுதியான திருக்கனூரில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது வாகன சோதனையின் போது எந்தவித பாரபட்சமும் இன்றி அவ்வழியாக செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.

    இந்த ஆய்வின் போது மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வம்சித ரெட்டி, திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் தேர்தல் துறையின் சோதனைச் சாவடி ஊழியர்கள், துணை ராணுவ படையினர் உடனிருந்தனர்.

    தொடர்ந்து எல்லைப் பகுதிகளான முள்ளோடை, சோரியாங்குப்பம், மணமேடு ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச்சாவடிகளுக்கு சென்று அவர் ஆய்வு செய்தார்.

    இதேபோல் தேர்தல் பொதுப்பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள பியூஷ் சிங்லா ஏம்பலம், பாகூர் தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

    • பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
    • குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெங்கவல்லி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது பறக்கும் படை அதிகாரிகளை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர்.

    இதையடுத்து அந்த காரை பறக்கும் படை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது அந்த காரில் இருந்தது மூட்டைகளை பிரிந்து பார்த்த போது அதில் 50 மூட்டைகளில் குட்கா இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து குட்கா மூட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள் வீரகனூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து காரின் எண்ணை வைத்து யாருடையது என்பது குறித்தும், குட்கா எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
    • போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் பறக்கும்படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக ஒரு பெண் மது போதையில் வந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை பிடித்து சோதனை நடத்தியதில் 3 கட்டுகளாக பணம் இருந்தது தெரியவந்தது. பணத்தை எண்ணிப்பார்த்ததில் ரூ.1½ லட்சம் இருந்தது.

    விசாரணையில் அவர் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த மணி மேகலை (வயது 35) என்பதும், பண்ணாரி அம்மன் கோவிலில் பிச்சை எடுத்த பணத்தை வைத்திருந்ததாக கூறினார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    இந்தநிலையில் திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் ஏ.டி.காலனி பகுதியை சேர்ந்த நித்தியா என்பவரது வீட்டில் பீரோவில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் திருட்டு போனது. இது குறித்து நல்லூர் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு பெண், நித்தியா வீட்டுக்குள் வந்து சென்றது தெரியவந்தது.

    அந்த பெண் குறித்து விசாரிக்கும் போது பறக்கும் படை சோதனையில் சிக்கிய மணிமேகலை என்பது தெரியவந்தது. அவர்தான் ரூ. 1½ லட்சம் பணத்தை திருடியதுடன், பிச்சை எடுத்து வைத்திருந்ததாக பறக்கும் படையினரிடம் தெரிவித்து தப்பிக்க முயன்றுள்ளார். இதையடுத்து போலீசார் மணிமேகலையை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×