என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "fishing festival"
- அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர்.
- சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் தனி நபரிடம் குத்தகைக்குவிட்டனர். அவரின் குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற்றது. இதில் சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணை கரை கோட்டாலம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.
தொடர்ந்து அணையில் இறங்கி வலையை வீசி விரால், ஜிலேப்பி, கட்லா, ரோகு கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 7000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். இதனால் இப்பகுதி திருவிழா போல காட்சியளித்தது.
- சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்
- கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும்.
நத்தம்:
நத்தம் தாலுகா சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டி கேசரி கண்மாயில் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆண்டுதோறும் மழை காலத்தில் கேசரி கண்மாயில் நீர் சேகரிக்கின்றனர். கண்மாயில் நிறைந்த நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். கோடையில் நீர் வற்றும் போது மீன்பிடி திருவிழா நடைபெறுகிறது.
சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காலை முதலே கண்மாயில் பொதுமக்கள் குவிந்தனர். முதற்கட்டமாக வெளியூர், உள்ளூர் நபர்களுக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். விரால், ஜிலேபி கெண்டை ஆகிய மீன்களை பிடித்தனர்.
கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும். இதையடுத்து கட்டணம் இன்றி கிராமத்தினர் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் தங்களிடம் உள்ள வலை, பரி, கச்சா, கூடை, கொசுவலை, சேலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடிக்கும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.
முடிவில் தங்களுக்கு கிடைத்த மீன்களை பலருடன் பகிர்ந்து கொண்டன்ர். இதனால் பக்கத்து கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் மீன் குழம்பு மனம் கமகமத்தது. இதன் மூலம் கிடைத்த வருவாயை கிராமத்தில் பொது தேவைக்கு பயன்படுத்து கின்றனர்.
- திருப்பத்தூர் அருகே கண்மாய் பராமரிப்பு நிதிக்காக நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
- கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசெவல்பட்டியில் புது கண்மாய் பராமரிப்பு பணிக்காக நிதி திரட்டுவ தற்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப் படுவது வழக்கம். இந்த ஆண்டும் விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் வற்றியது.
இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். கண்மாய் மடை பராமரிப்பு மற்றும் இதர பராமரிப்புக்கு நிதி திரட்ட முடிவு செய்து ஊத்தா கூடை மூலம் முதலில் மீன் பிடிக்கவும், தொடர்ந்து கிராமமக்கள் மீன்பிடித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.
கீழ செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரிய வர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சா, அரி, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகர ணங்களை கொண்டு ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்று மையாக கண்மாயில் மீன்களை பிடித்தனர்.
இதில் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத் தன. கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.
- கன்னியாபுரம் அம்பட்டையன் குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
- ஏராளமானோர் இறங்கி கட்லா மீன், விரால் மீன், ஜிலேபி கண்டா ஆகிய மீன்களைப் பிடித்தனர்.
குள்ளனம்பட்டி:
சாணார்பட்டி அருகே அஞ்சுகுளிபட்டி ஊராட்சி க்குட்பட்ட கன்னியாபுரம் அம்பட்டையன் குளத்தில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
கன்னியா புரம் கிராமத்தில் உள்ள கண்மாயில் இருந்து தண்ணீர் விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டது.தற்போது கண்மாயில் நீர் வற்றியதால் மீன்பிடித் திருவிழா அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து புதுக்கோட்டை, சிங்கம்புணரி, கொட்டா ம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் இறங்கி கட்லா மீன், விரால் மீன், ஜிலேபி கண்டா ஆகிய மீன்களைப் பிடித்தனர்.
- கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 5000 கிலோ மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.
- மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர். அதன்படி குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற உள்ளதாக தொலைபேசி மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் பரவியது. அதன்படி நேற்று சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணைகரை கோட்டாலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.
தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் அனைவரும் அணைப்பகுதியில் இறங்கி வலைகளை வீசி மீன்களை பிடித்துக் கொண்டு இருந்தனர். போலீசார் பொதுமக்களிடம் அணையின் அருகே ஆழமான பகுதியில் மீன் பிடிக்க வேண்டாம் என கூறினர். ஆனால் பொதுமக்கள் மீன்பிடிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதியில் இறங்கி மீன்களை பிடித்தனர். தொடர்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் விதமாக அணையின் கதவைத் திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் அணையில் தண்ணீர் குறைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். மணிமுக்தா அணையில் பொதுமக்கள் சுமார் 2000 பேர் கூடி சுமார் 5000 கிலோ மீன்களை பிடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் திருவிழா போல காட்சியளித்தது.
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள ஓட்டக்கோவில்பட்டியில் அங்குள்ள கோவில் ஊருணியில் தூண்டில் போட்டு மீன் பிடித்து கொண்டாடும் வினோத திருவிழா நேற்று கொண்டாடப்பட்டது. மற்ற நாட்களில் மீன்களின் நலன் கருதி யாரும் தூண்டில் போட அனுமதி கிடையாது.
இந்தநிலையில் கார்த்திகை மாத தீப திருநாளை முன்னிட்டு, தூண்டில் மூலமாக யார் வேண்டுமானாலும் மீன்களை பிடித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஊருணியில் கிராம மக்கள் நேற்று மீன் பிடித் திருவிழாவை நடத்தினர்.
அங்குள்ள ஊருணியில் ஜிலேபி, விரால், குரவை போன்றவை மட்டுமே வளர்க்கப்படுவதால் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்வத்துடன் தூண்டில் போட்டு மீன் பிடித்தனர்.
இதில் ஒவ்வொருவரும் தலா 2 கிலோ வீதம் மீன்களை பிடித்து சென்று வீட்டில் சமைத்து உண்டனர். அனைவருக்கும் தேவையான மீன்கள் கிடைத்ததால், ஓட்டக்கோவில்பட்டி கிராமம் முழுவதும் நேற்று மீன் குழம்பு மணம் பரவியது. இவ்வாறு செய்வதால் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்