என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » fake certificate
நீங்கள் தேடியது "Fake certificate"
போலி சான்றிதழ் கொடுத்து ராணுவத்தில் சேர முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:
கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் சேர 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாலிபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கல்வி சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது தர்மபுரியை சேர்ந்த பரத், பெருமாள் ஆகியோரின் கல்வி சான்றிதழ் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்களது சான்றிதழை சரி பார்த்தபோது போலியானது என்பது தெரிய வந்தது. வேறு சிலரின் சான்றிதழ்களை அவர்கள் போலியாக தயாரித்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து ராணுவத்திற்கு ஆள் தேர்வு இயக்குனர் ரேனி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரத், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது தங்களது வயது முதிர்வு அடைந்து விட்டதால் வயது குறைவானவர்களின் கல்வி சான்றிதழை கொடுத்ததாக தெரிவித்தனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் போலி சான்றிதழ் கொடுத்தாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் உள்ள போலீஸ் பயிற்சி மைதானத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் முகாம் நடைபெற்றது.
இதில் சேர 10-ம் வகுப்பு கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதில் கோவை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வாலிபர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு உடல் தகுதி தேர்வு, மருத்துவ சான்றிதழ் சரி பார்ப்பு நடைபெற்றது.
இதனை தொடர்ந்து கல்வி சான்றிதழ் சரி பார்க்கும் பணி நடந்தது. அப்போது தர்மபுரியை சேர்ந்த பரத், பெருமாள் ஆகியோரின் கல்வி சான்றிதழ் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.
அவர்களது சான்றிதழை சரி பார்த்தபோது போலியானது என்பது தெரிய வந்தது. வேறு சிலரின் சான்றிதழ்களை அவர்கள் போலியாக தயாரித்து கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இது குறித்து ராணுவத்திற்கு ஆள் தேர்வு இயக்குனர் ரேனி கோவை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பரத், பெருமாள் ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய போது தங்களது வயது முதிர்வு அடைந்து விட்டதால் வயது குறைவானவர்களின் கல்வி சான்றிதழை கொடுத்ததாக தெரிவித்தனர். ராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் போலி சான்றிதழ் கொடுத்தாக தெரிவித்து உள்ளனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது மாணவியை தள்ளி கொன்றது தொடர்பாக போலீஸ் விசாரணை முடிந்து போலி பயிற்சியாளர் ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். #Logeshwari
கோவை:
கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறாமல், போலி சான்றிதழ் மற்றும் கடிதம் தயாரித்து 6 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோட்டில் மனுதாக்கல் செய்தனர். கடந்த 17-ந் தேதி முதல் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆறுமுகத்தை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்ததாக கூறினார்.
இதனையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்த யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம் கூறினார். பின்னர் தனிப்படை போலீசார் யோகானந்தத்தை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் 4 நாள் போலீஸ் காவல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து போலீசார் அவரை அழைத்து வந்து 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர் ஆறுமுகத்தை வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் ஆறுமுகத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #Logeshwari
கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) என்பவரை ஆலாந்துறை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறாமல், போலி சான்றிதழ் மற்றும் கடிதம் தயாரித்து 6 ஆண்டுகளுக்கு மேலாக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பயிற்சி கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை காவலில் எடுத்து விசாரிக்க கோட்டில் மனுதாக்கல் செய்தனர். கடந்த 17-ந் தேதி முதல் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து ஆறுமுகத்தை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கிருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்ததாக கூறினார்.
இதனையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்த யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம் கூறினார். பின்னர் தனிப்படை போலீசார் யோகானந்தத்தை கோவைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் 4 நாள் போலீஸ் காவல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து போலீசார் அவரை அழைத்து வந்து 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்னிலையில் ஆஜர் படுத்தினர். அவர் ஆறுமுகத்தை வருகிற 27-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் போலீசார் ஆறுமுகத்தை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். #Logeshwari
கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது மாணவியை தள்ளி கொன்ற பயிற்சியாளருக்கு போலி சான்றிதழ் அச்சடித்து கொடுத்த சிவகாசி அச்சக உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) கைது செய்யப்பட்டார்.
அவர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறவில்லை என்பதும், போலியாக சான்றிதழ்களை தயாரித்து மாணவ, மாணவிகளுக்கு கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி முதல் ஆறுமுகத்தை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கி ருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்கள் அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர்.
ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக அவர் கூறினார். எனினும் அரசு முத்திரையுடன் கூடிய சான்றிதழ்களை அச்சடிப்பதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாமல் யோகானந்தம், சான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்தது ஏன்? எவ்வளவு மாதங்களாக அச்சடித்து கொடுத்தார்? என விசாரணை நடந்து வருகிறது.
ஆறுமுகத்தின் மோசடிகளுக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக அவரது கூட்டாளிகள் 5 பேர், தோழி ஒருவர் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகத்துக்கு கோர்ட்டு அனுமதி வழங்கிய 4 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை இன்று மாலை கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர். #Logeshwari
கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரியை கீழே தள்ளி கொன்ற பயிற்சியாளர் ஆறுமுகம்(வயது 31) கைது செய்யப்பட்டார்.
அவர் தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி பெறவில்லை என்பதும், போலியாக சான்றிதழ்களை தயாரித்து மாணவ, மாணவிகளுக்கு கொடுத்து கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்திருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
இதையடுத்து கடந்த 17-ந் தேதி முதல் ஆறுமுகத்தை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அவரை சென்னை அழைத்து சென்று மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அங்கி ருந்து ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.
தொடர்ந்து நடந்த விசாரணையில் ஆறுமுகம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய முத்திரைகளை பயன்படுத்தி சிவகாசியில் உள்ள அச்சகம் ஒன்றில் சான்றிதழ்களை அச்சடித்தது தெரிய வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் சிவகாசிக்கு சென்று போலிசான்றிதழ்கள் அச்சடித்து கொடுத்ததாக யோகானந்தம்(50) என்பவரை மடக்கிப்பிடித்தனர்.
ஆறுமுகம் போலி பயிற்சியாளர் என தெரியாமல் அவருக்கு சான்றிதழ்களை அச்சடித்து கொடுத்ததாக அவர் கூறினார். எனினும் அரசு முத்திரையுடன் கூடிய சான்றிதழ்களை அச்சடிப்பதற்கென்று சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாமல் யோகானந்தம், சான்றிதழ்களை ஆறுமுகத்துக்கு அச்சடித்து கொடுத்தது ஏன்? எவ்வளவு மாதங்களாக அச்சடித்து கொடுத்தார்? என விசாரணை நடந்து வருகிறது.
ஆறுமுகத்தின் மோசடிகளுக்கு வேறு யாரும் உடந்தையாக இருந்தார்களா? என விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக அவரது கூட்டாளிகள் 5 பேர், தோழி ஒருவர் என பலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகத்துக்கு கோர்ட்டு அனுமதி வழங்கிய 4 நாள் போலீஸ் காவல் இன்றுடன் முடிவடைகிறது. எனவே அவரை இன்று மாலை கோவை கோர்ட்டில் ஆஜர் படுத்த உள்ளனர். #Logeshwari
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X