search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Face Pack"

    • அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    • முல்தானி மிட்டியுடன் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம்.

    சரும மினுமினுப்புக்கும் பாதுகாப்பிற்கும் உங்களுக்கு உதவக்கூடிய இயற்கையான பொருட்கள் நிறைய உள்ளன. அதில் ஒன்றான முல்தானி மிட்டி ஒரு இயற்கையான களிமண் மூலப்பொருள் ஆகும். இது அனைத்து தோல் பிரச்சனைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பண்டைய ஆயுர்வேத மூலிகை மருந்து இயற்கை தாதுக்களால் நிரப்பப்பட்டுள்ளது. இது முகப்பரு, கரும்புள்ளிகள், சரும பிரச்சனைகள் மற்றும் திறந்த துளைகளை குறைக்க உதவுகிறது. தூள் வடிவ பேஸ்டாகப் பயன்படுத்தும்போது, அது சருமத்தை மெதுவாக வெளியேற்றி, மென்மையான, மிருதுவான சருமத்தை உங்களுக்கு வழங்குகிறது.

    முல்தானி மிட்டியுடன் உங்கள் சமையலறை பொருட்களை சேர்த்து பேஸ் பேக்குகளை நீங்கள் உருவாக்கலாம். உங்களுக்கு அழகான சருமத்தை வழங்கக்கூடிய முல்தானி மிட்டி பேஸ் பேக்குகளை பார்க்கலாம்.

    1 தேக்கரண்டி முல்தானி மெட்டி தூள், 1/4 கப் பால் (அதிக கொழுப்பு), ரோஸ் வாட்டர். அனைத்து பொருட்களையும் நன்கு கலந்து மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். அதை முகத்தில் தடவவும். இந்த பேஸ் பேக்கை 10-15 நிமிடங்கள் அப்படியே முகத்தில் வைத்திருக்கவும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

    1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி சந்தன தூள், 2 தேக்கரண்டி தேங்காய் தண்ணீர், 2 தேக்கரண்டி பால். அனைத்து பொடிகள் மற்றும் திரவங்களை நன்கு கலந்து, நன்றாக பேஸ்ட் செய்யவும். சுத்தமான உங்கள் முகத்தில் தடவவும். அதை 10 நிமிடங்கள் அப்படியே விடவும். வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமத்தை பிரகாசமாக்குவதற்கும், சுத்தப்படுத்துவதற்கும் மற்றும் ஈரப்பதமாக்குவதற்கும் இந்த கூலிங் ஃபேஸ் பேக் வேலை செய்கிறது.

    1 டேபிள் ஸ்பூன் முல்தானி மிட்டி தூள், 1 டேபிள் ஸ்பூன் சந்தன தூள், 1/4 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர். அனைத்து பொடிகளையும் ஒன்றாக கலந்து, தண்ணீரில் நன்றாக பேஸ்ட் செய்யவும். அந்த பேஸ்ட்டை முகப்பரு, பருக்கள் மீது தடவவும். 30-45 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்கவும். பின்னர், உங்கள் முகத்தை வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் கழுவவும். சிறந்த முடிவுகளுக்கு, இந்த இயற்கையான பேஸ் பேக்கை மாதத்திற்கு இரண்டு முறையாவது பயன்படுத்த வேண்டும். முகப்பரு, கரும்புள்ளிகள் போன்ற சரும பிரச்சனைகளை சரி செய்ய ஸ்பாட் ட்ரீட்மென்ட் பேக்கை பயன்படுத்தலாம்.

    1 தேக்கரண்டி முல்தானி மிட்டி தூள், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல். உங்கள் முல்தானி மிட்டியை சம பாகமாக கற்றாழை ஜெல்லுடன் எடுத்துக்கொள்ள வேண்டும். முல்தானி மிட்டி மற்றும் கற்றாழை ஜெல்லை சம பாகங்களாக எடுத்துக் கொள்ளவும். ஒரு மென்மையான பேஸ்ட் வரை நன்கு கலக்கவும். அதை உங்கள் முகத்தில் தடவவும். பேக் 10-15 நிமிடங்கள் அப்படியே இருக்கட்டும். பின்னர், வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும். அனைத்து தோல் வகை சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு இந்த ஈரப்பதமூட்டும் மாஸ்க் உதவும்.

    • ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு.
    • ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும்.

    பல்வேறு சத்துக்கள் நிறைந்த ஸ்டாபெர்ரி பழங்கள் சாப்பிட்டால் உடல் நலத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் பல நன்மைகள் உண்டு. இதிலிருக்கும் விட்டமின் ஏ, சி, கே,கால்சியம்,மக்னீசியம் ஃபோலிக் ஆசிட் போன்ற சத்துக்கள் நிறைந்த ஸ்ட்ராபெர்ரி பழம் சருமத்திற்கும் மிகவும் நல்லது.

    சருமச் சுருக்கம் : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் சருமச்சுருக்கங்களை வராமல் தடுத்திடும். சருமச் செல்களை புத்துணர்வுடன் வைத்துக்கொள்ள உதவிடும். நான்கு ஸ்ட்ராபெர்ரிகளை அரைத்து அத்துடன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் கலந்து பேஸ் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவி விடலாம். வாரம் ஒரு முறை இப்படிச் செய்தால் சருமம் ஆரோக்கியத்துடன் இருப்பதுடன் சரும சுருக்கங்களை தவிர்த்திடும்.

    சருமப் பொலிவு : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி மற்றும் எலாகிக் ஆசிட் சருமத்தை பொலிவாக வைத்திருக்க உதவிடும். ஸ்ட்ராபெர்ரியை பாதியாக வெட்டி அதை முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம் அல்லது ஸ்ட்ராபெர்ரியை கூலாக்கி அவற்றில் பாலைக் கலந்து முகத்தில் அப்ளை செய்யலாம்.

    உதடுகள் : உதடுகளை நல்ல நிறமாக எடுத்துக் காட்ட ஸ்ட்ராபெர்ரி உதவிடும். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்கள் உதடுகளில் உள்ள இறந்த செல்களை நீக்க உதவிடும். ஸ்ட்பெர்ரியை பாதியாக கட் செய்து உதட்டில் தேய்த்து வரலாம். ஸ்ட்ராப்பெர்ரி கூலுடன் பெட்ரோலியம் ஜெல்லியுடன் கலந்து லிப் பாம்மாக பயன்படுத்தலாம்.

    வெண்மை பற்கள் : கறை படிந்த பற்களை வெண்மையாக்க ஸ்ட்ராபெர்ரியை பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரியை அரைத்து டூத் வொயிட்னராக அப்ளை செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இதிலிருக்கும் விட்டமின் சி பற்களை வெண்மையாக்குவதுடன் ஈறுகளை உறுதியாக்கும்.

    தேமல் : சருமத்தில் எங்கேனும் நிறம் மாறுபட்டிருந்தாலோ அல்லது தேமல், மரு போன்றவை வந்திருந்தாலோ இதனை செய்யலாம். ஸ்ட்ராபெர்ரிகூலுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவினால் உடனடி பலன் கிடைத்திடும். இதனை வாரம் மூன்று முறை செய்யலாம்.

    நகம் : ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான பயோட்டின் இருக்கிறது. இந்த பயோட்டின் நகம் வளர்ச்சிக்கு மற்றும் அதன் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்ட்ராபெர்ரி அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமான நகத்திற்கு கியாரண்ட்டி!

    க்ளன்சர் : ஸ்ட்ராபெர்ரியில் இருக்கும் விட்டமின் சி சாலிசைக்ளிக் ஆசிட் சிறந்த பேஷியல் க்ளன்சராக பயன்படும். சாலிசைக்ளிக் ஆசிட் நம் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் சருமத்துளைகளை இறுக்கமாக்கிடும். ஸ்ட்ராபெர்ரியை அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி லேசகா மசாஜ் செய்திடுங்கள்.

    டோனர் : ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து அவற்றுடன் ரோஸ் வாட்டர் கலந்து பீரசிரில் வைத்திடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து அதனை முகத்தில் தேய்த்து வர ஸ்ட்ராபெர்ரி சிறந்த டோனராக செயல்படும்.

    ஸ்க்ரப் : ஸ்டாபெர்ரியை அரைத்து அந்த கலவையுடன் பொடித்த ஓட்ஸ் மற்றும் க்ளிசரின் கலந்து பாதம் முழுவதும் மசாஜ் செய்திடுங்கள். பின்னர் சூடான நீரில் 10 காலை வைத்தால் பாதங்களில் உள்ள டெட் செல்கள் நீங்கிடும்.

    அடர்த்தியான கூந்தல் : ஸ்ட்ராபெர்ரியில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்,மெக்னீசியம் மற்றும் காப்பர் இருக்கிறது. இவை எல்லாமே கூந்தலின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. பத்து ஸ்ட்ராபெர்ரி பழங்களை எடுத்து அரைத்துக் கொள்ளுங்கள் அவற்றுடன் இரண்டு ஸ்பூன் மயோனைஸ் கலந்து தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்திடுங்கள். அரை மணி நேரம் ஊறிய பிறகு தலைக்குளிக்கலாம். இவை தலை முடியை அதிகம் வரண்டுவிடாமல் வைத்திருக்க உதவுவதுடன் முடி உதிர்தலையும் தடுத்திடும்.

    பொடுகு : பொடுகுத் தொல்லை அதிகமிருந்தால் ஸ்ட்ராபெர்ரி பழக்கூலுடன் தேயிலை மர எண்ணெய் இரண்டு டீஸ்ப்பூன் கலந்து தலையில் தேய்த்து வர பொடுகுத் தொல்லை ஒழிந்திடும், வாரம் ஒரு முறை இப்படிச் செய்யலாம்.

    • காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும்.

    காபி இல்லாமல் அன்றைய நாளே இல்லை என்று சொல்லலாம். ஏனென்றால் நாம் அனைவரும் காபியை குடித்த பின் தான் மற்ற வேலைகளை செய்ய ஆரம்பிக்கிறோம். சிலருக்கு காபி குடிக்கவில்லை என்றால் தலை வலியே வந்துவிடும். எனவே காபி தூள் நம் அனைவரின் வீட்டிலும் கட்டாயம் இருக்கும் ஒரு பொருளாகும். இந்த காபி நமக்கு புத்துணர்ச்சியூட்டும் பானமாக மட்டுமில்லாமல் நம் முகத்தை அழகூட்டவும் பயன்படுகிறது. என்னடா நம்ம காபி குடிக்க மட்டும் தான பயன்படுத்துவோம் இது என்ன புதுசா இருக்குனு நீங்க யோசிக்கலாம். ஆமாங்க காபி தூள் நம்ம முகத்தை அழகாக்கவும் பயன்படுகிறது.

    காபி தூள் ஒரு கப், ஏலக்காய் பொடி 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் 3 ஸ்பூன் மற்றும் சர்க்கரை 1 கப் சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள். அதை குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் முகம் மட்டுமல்லாது கை கால்களிலும் தேய்த்து சிறிது நேரம் ஊற வைக்கவும். பின்னர் மிதமான நீரில் குளிக்கவும். தினமும் இதை செய்து வந்தால் படிப்படியாக முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் காணலாம்.

    ஒரு டீஸ்பூன் காபி பொடியில் இரண்டு ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் ஸ்க்ரப் போல் 10 நிமிடங்களுக்கு தேய்த்து விடுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும். இப்படி வாரம் ஒரு முறை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவுக்கு உங்கள் முகம் பளிச்சிடும்.

    கற்றாழையை ஐந்து ஸ்பூன் எடுத்து மசித்துக்கொள்ளவும். அதோடு காபி பொடி ஒரு டீஸ்பூன் கலந்து முகத்தில் 10 - 15 நிமிடங்களுக்கு ஸ்கர்ப் செய்யவும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். 4 ஸ்பூன் காபி தூளில் ஒரு கப் பால் மற்றும் 2 ஸ்பூன் தேன் கலந்து முகம் கை, கால்கள், கழுத்து போன்ற இடங்களில் தடவி 10 - 15 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள்.

    4 ஸ்பூன் காபி தூள், 4 ஸ்பூன் பட்டர், ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கெட்டியான பதத்தில் கலக்கவும். முகத்தில் மட்டுமல்லாது கை கால், கழுத்து போன்ற இடங்களில் தேய்த்து 10 - 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

    காபி பவுடர், சர்க்கரை இரண்டையும் சமமாக கலந்து சிறிது தண்ணீர் இட்டு, முகத்தில் ஸ்கிரப் போன்று பயன்படுத்தலாம். இதனால் சருமத்தின் இறந்த செல் நீங்கி முகம் பொலிவு பெறும்.

    கால், கையில் டேன், கருமையை போக்க கடல் உப்புடன் காபி பவுடர் சேர்த்து ஏதேனும் எண்ணெயில் கலந்து சருமத்தில் 15 நிமிடம் தேய்த்து மசாஜ் செய்து பின் கழுவவும்.

    இதில் கொடுக்கப்பட்டுள்ள ஏதாவது ஒரு முறையை நீங்கள் செய்து வந்தால் உங்கள் முகத்தில் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்.

    • வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கலாம்.
    • கடலை மாவை வைத்து நம் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

    இந்த ஆண்டு கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. கோடை வெப்பத்தால் சருமம் பிரச்சனைகள் வருமோ என்று பெண்கள் கவலைப்பட வேண்டாம். வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சருமத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பாதுகாக்கலாம். அந்த வகையில் வீட்டில் இருக்கும் கடலை மாவு அனைத்து விதமான சரும பிரச்சனைகளில் இருந்தும் காக்கும் சக்தி படைத்தது.

    வீட்டில் இருக்கும் கடலை மாவை வைத்து நம் சருமத்தை எப்படி பாதுகாக்கலாம் என்று அறிந்து கொள்ளலாம்.

    ஒரு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு முகத்தில் நன்றாக தடவி, உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் பளிச் என மாறும்.

    சருமம் எண்ணெய் வழிந்து பிசு, பிசுப்பாக ஒரு சில பேருக்கு இருக்கும். அதற்கு கடலை மாவுடன் சிறிது தயிர் சேர்த்து பேஷியல் செய்து கொண்டால் முகம் தெளிவு பெறும். மேலும் இதனுடன் எலுமிச்சை சாறு ஊற்றி பேக் செய்தாலும் எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவு பெறும்.

    வெயிலில் அடிக்கடி செல்பவர்களுக்கு, சூரிய ஒளி பட்டு முகம் கருப்பாகும். இதனை நீக்க தேங்காய் பால் 1 ஸ்பூன், கடலை மாவு ஒரு ஸ்பூன் எடுத்து கலந்து பசை போல பிசைந்து,முகத்தில் பூச வேண்டும். உலர்ந்ததும் கழுவ வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முகம் பிரகாசமாக இருக்கும்.

    நிறைய பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு, கடலை மாவில், தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் நீரில் கழுவி, நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால், கருமை விரைவில் நீங்கி விடும்.

    உருளைகிழங்கு சாறுடன், கடலை மாவையும் சேர்த்து முகத்தில் பேக் செய்யும்போது ,பார்லரில் பேசியல் செய்தது போன்ற ஒரு பளபளப்பை கொடுக்கும். சோப்பிற்கு பதிலாக தினமும் கடலை மாவு பயன்படுத்தும் போது பருக்களற்ற தூய்மையான முகத்தை பெறலாம்.

    • பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது.
    • சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.

    இந்த பாதாம் ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, முகம் பொலிவோடும், பிரகாசமாகவும் இருக்கும். பாதாம் விலை அதிகமானது தான். இருப்பினும், இதைக் கொண்டு ஃபேஸ் பேக் போட்டு வந்தால், எதிர்பார்த்த அழகைப் பெறலாம்.

    பாதாம் பருப்பை நிறைய பேர் ஊறவைத்து சாப்பிடுகிறார்கள். ஊறவைத்த பாதாம் ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருப்பது போல அதன் தோலும் சரும பராமரிப்புக்கு பயன்படக்கூடியது. பாதாம் தோலை கொண்டு இறந்த சரும செல்களை உரித்தெடுக்கலாம். 10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

    அதனுடன் சிறிதளவு தண்ணீரும் சேர்த்துக்கொள்ளலாம். சருமத்தின் தன்மையை பொறுத்து தயிரும் கலந்து கொள்ளலாம். இந்த பேஸ்டை முகம் மற்றும் கைகளில் தடவி மசாஜ் செய்யவும். அது சருமத்தில் படர்ந்திருக்கும் இறந்த செல்களை நீக்குவதுடன், சருமத்தை சுத்தப்படுத்தவும் உதவும். இந்த மாஸ்க்கை தினமும் பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

    பாதாம் தோல் வயதான அறிகுறிகளில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் தன்மையும் கொண்டது. சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. 10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து சருமத்தில் பூசலாம். அதனுடன் தேனும் சேர்த்துக்கொள்ளலாம். அது உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் சருமத்தை கழுவி விடலாம். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் சருமம் பொலிவுடனும், இளமை தோற்றத்துடனும் மிளிரும்.

    பாதாம் பேஸ் பேக் கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏற்றது. இந்த மாஸ்க்கை கோடையில் தினமும் பயன்படுத்தி வந்தால், சருமம் கருமையாவதைத் தடுப்பதோடு, பருக்களின் பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம். மேலும் வெளியே வெயிலில் சுற்றுவதால், சருமத்தில் இறந்த செல்களின் அளவும் அதிகரித்து, சருமம் பொலிவிழந்து காணப்படுவது தடுக்கப்படும்.

    • கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது.
    • தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.

    தர்பூசணிகள் ஆக்ஸிஜனேற்றி பண்புகள் மற்றும் வைட்டமின்களின் நன்மைகளால் நிரம்பியுள்ளன, அவை நம் சருமத்திற்கு நல்லது. நீங்கள் உங்கள் அன்றாட உணவில் தர்பூசணியைச் சேர்க்க வேண்டும், குறிப்பாக கோடை காலத்தில் தினமும் தர்பூசணி பழம் சாப்பிடுவது நல்லது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கும் நல்லது. அதன் அற்புதமான நன்மைகளுக்காக உங்கள் சருமத்திலும் இதைப் பயன்படுத்தலாம்.

    தர்பூசணியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுடன் சண்டையிடுகிறது. இது உங்கள் சருமம் விரைவில் வயதான தோற்றத்தை தடுக்கவும் உதவுகின்றன. உங்கள் முகத்தில் தர்பூசணி பழத்தை அப்ளை செய்வதால், சரும துளைகள் இறுக்கப்பட்டு, சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பை குறைக்க உதவும். தர்பூசணிகளில் அதிக நீர் சத்து நிறைந்து இருப்பதால், வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை அடிக்கடி செய்து வரலாம். தர்பூசணியில் உள்ள வைட்டமின் சி ஒளிரும் சருமத்தை பெற உதவுகிறது.

    எந்த பேஷியல் செய்தாலும் முதலில் உங்கள் முகத்தை சுத்தப்படுவது அவசியம். பின்னர் ஒரு பவுலில் சிறிது தர்பூசணி சாறு மற்றும் தேங்காய் எண்ணெயை எடுத்து நன்கு கலந்து கொள்ளவும், இந்த கலவையை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் ஒரு பருத்தி பஞ்சு கொண்டு அப்ளை செய்யவும். இதை 5-10 நிமிடங்கள் வைத்து விட்டு உலர்ந்த பின்னர் கழுவவும்.

    தர்பூசணி சாறு மற்றும் அரிசிப் பொடியைப் பயன்படுத்தி ஒரு ஸ்க்ரப் தயாரிக்கவும். உங்கள் முகத்தை சுமார் 3-5 நிமிடங்கள் வட்ட இயக்கத்தில் மெதுவாக ஸ்க்ரப் செய்து மசாஜ் செய்யவும். எனினும் இது உங்கள் சருமத்தை பாதிக்காதவாறு பார்த்து கொள்ளுங்கள். இதனை வாரம் ஒரு முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள், பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் பிரச்சனைகள் நீங்கி விடும்.

    உங்கள் சருமத்தில் இருந்து இறந்த செல்களை நீக்கிய பிறகு, அதை ஈரப்பதமாக்குவது முக்கியம். இதற்கு தர்பூசணி சாறு, தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளவும். அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து மசாஜ் கிரீம் தயாரிக்கவும். இந்த கிரீமை உங்கள் முகத்தில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்யுங்கள். இந்த மசாஜ் கிரீம் உங்கள் முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், அழகான பிரகாசத்தை அளிக்கவும் உதவும்.

    தர்பூசணி பேஸ் பேக் செய்ய ஒரு பாத்திரத்தில், சிறிது கடலை மாவு, பால் மற்றும் சிறிது தர்பூசணி சாறு எடுத்து ஒன்றாக சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு பிரஷை பயன்படுத்தி, உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் இந்த ஃபேஸ் பேக்கை தடவி 15 நிமிடங்கள் உலர விட்டு பின்னர் சாதாரண தண்ணீரில் கழுவவும்.

    இது முற்றிலும் இயற்கையானது என்பதால் பொதுவாக எந்த பக்க விளைவுகளும் இல்லை என்றாலும், சரும பிரச்னைகள் எதுவும் ஏற்படாமல் இருக்க உங்கள் முகத்தில் இதனை நேரடியாகப் பயன்படுத்துவதற்கு முன்பு உங்கள் கையில் பேட்ச் டெஸ்ட் செய்வது நல்லது.

    • ஆரஞ்சு தோலில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.
    • மாசு, வெயிலால் ஏற்படும் கருமையை இயற்கை பொருட்களைக்கொண்டு நீக்கும் முறையே ‘பிளீச்சிங்’.

    அதிகப்படியான வெயில், மாசு போன்றவற்றால் சருமம் கருத்து பொலிவு இழந்து போகும். இந்தக் கருமையை, சில பொருட்களைக்கொண்டு நீக்கும் பராமரிப்பு முறையே 'பிளீச்சிங்' எனப்படுகிறது. எந்த விதமான ரசாயனமும் பயன்படுத்தாமல், எளிதாக கிடைக்கும் இயற்கையானப் பொருட்களைப் பயன்படுத்தி கருமையை நீக்கி, சரும நிறத்தை பழையபடி கொண்டு வர முடியும். அதைப்பற்றி பார்க்கலாம்.

    கடலை மாவு பிளீச்

    கடலை மாவு - 2 தேக்கரண்டி

    கோதுமை மாவு - 1 தேக்கரண்டி

    தயிர் - 2 தேக்கரண்டி

    பாதாம் - 5

    எலுமிச்சம் பழச்சாறு - 2 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் கடலை மாவு, கோதுமை மாவு, பொடியாக்கப்பட்ட பாதாம், தயிர், எலுமிச்சம் பழச்சாறு இவை அனைத்தையும் கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைக்கவும். சிறிது பஞ்சை காய்ச்சாத பாலில் நனைத்து முகம் முழுவதும் சுத்தப்படுத்தவும். பின்பு ஊறவைத்த கடலை மாவு கலவையை பூசி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். வாரம் 3 முறை இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்.

    புளி

    ரசாயனக் கலவை கலந்த பிளீச்சிங் பொருட்களுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக புளி இருக்கிறது. இது சருமத்துக்கு உடனடியான பொலிவைத் தரக்கூடியது.

    புளி - ஒரு எலுமிச்சை அளவு

    மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி

    அரிசி மாவு - 1 தேக்கரண்டி

    தேன் - 1 தேக்கரண்டி

    எலுமிச்சம் பழச்சாறு - 1 தேக்கரண்டி

    ரோஜா பன்னீர், தண்ணீர் - தேவையான அளவு

    வெந்நீரில் புளியை ஊறவைத்து அதன் சாற்றை கெட்டியாக பிழிந்தெடுத்துக்கொள்ளவும். பிழிந்த சாறில் அரிசி மாவு, மஞ்சள் தூள், எலுமிச்சம் பழச்சாறு மற்றும் தேன் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை ரோஜா பன்னீர் கொண்டு நன்றாகத் துடைத்த பின்பு, புளி கலவையை முகம் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவவும். வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்யலாம்.

    ஆரஞ்சு தோல்

    ஆரஞ்சு தோலில் உள்ள 'வைட்டமின் சி' சருமத்தில் உள்ள கரும்புள்ளி, சீரற்ற நிறத்தை நீக்கி பொலிவுடன் வைக்க உதவுகிறது. மேலும் இதிலுள்ள சிட்ரிக் அமிலம் சருமத்திற்கு உடனடியான மினுமினுப்பைத் தரக்கூடியது.

    ஆரஞ்சு தோல் பொடி - 2 தேக்கரண்டி

    வால்நட் பொடி - 1 தேக்கரண்டி

    சந்தனத் தூள் - 1 தேக்கரண்டி

    வெள்ளரிச் சாறு - 5 தேக்கரண்டி

    சிறிய பாத்திரத்தில் ஆரஞ்சு தோல் பொடி, வால்நட் பொடி, சந்தனத் தூள் மற்றும் வெள்ளரிச் சாறு என அனைத்தையும் நன்றாகக் கலந்து 10 நிமிடங்கள் ஊறவைக்கவும். முகத்தை வெள்ளரிச் சாறு கொண்டு துடைத்த பின்பு, ஆரஞ்சு தோல் பிளீச்சிங் கலவையை முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து சாதாரண நீரில் கழுவவும். இவ்வாறு வாரம் இரண்டு முறை ஆரஞ்சு தோல் பிளீச்சிங் செய்யலாம்.

    • 'மாய்ஸ்சுரைசர்' சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும்.
    • வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறையை பார்க்கலாம்.

    பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும். 'மாய்ஸ்சுரைசர்' சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைத்து, பொலிவை அதிகரிக்க உதவும். ஒரு சில மாய்ஸ்சுரைசர்களில் இருக்கும் ரசாயனக் கலவைகள் சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதைத் தவிர்க்க, வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களையே மாய்ஸ்சுரைசராக பயன்படுத்தும் முறைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

    தேங்காய் எண்ணெய், தேன்: தேங்காய் எண்ணெய்யில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள், சருமத்துக்கு ஈரப்பதத்தைக் கொடுத்து அதை நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவும். முகப்பரு பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இதை பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். தேன் சிறந்த மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி செப்டிக் பண்புகள் முகப்பருக்களை குணமாக்கும்.

    பயன்படுத்தும் முறை: தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாகக் கலந்து, முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவவும். 20 முதல் 30 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவவும். தேங்காய் எண்ணெய்க்கு மாற்றாக, ஆலிவ் எண்ணெய்யையும் பயன்படுத்தலாம்.

    பாலாடை, வாழைப்பழம்: காய்ச்சி ஆறவைத்த பாலில் இருந்து உருவாகும் 'பாலாடை' (பிரஷ் கிரீம்) சிறந்த மாய்ஸ்சுரைசிங் பண்புகளைக் கொண்டுள்ளது. பழங்காலத்தில் இருந்தே பாலாடையை சரும பராமரிப்புக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதை வாழைப்பழத்துடன் கலந்து பயன்படுத்தும்போது, அதன் பலன் இரட்டிப்பாகும். பாலாடை மற்றும் வாழைப்பழம் சேர்ந்த கலவை சருமத்துக்கு ஈரப்பதத்தை மட்டுமில்லாமல் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது. கடுமையான குளிர் கால நாட்களில், சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதற்கும் இது உதவும்.

    பயன்படுத்தும் முறை: பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து, பிசைந்து கொள்ளவும். அதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பாலாடையை சேர்க்கவும். இதை மிருதுவான பசை போல கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து, வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தமான துணியை நனைத்து முகத்தை துடைக்கவும். வாழைப்பழத்தை சேர்க்க விரும்பாதவர்கள், பாலாடையை மட்டும் பயன்படுத்தலாம்.

    பப்பாளி டோனர்: பப்பாளியில் சருமத்தைப் பொலிவாக்கும் மூலக்கூறுகள் உள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள், சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க உதவும். பப்பாளி, சூரிய ஒளியால் ஏற்படும் தோல் அழற்சியை குணப்படுத்தும். பப்பாளியை தொடர்ந்து உபயோகித்து வந்தால் சரும வறட்சி நீங்கும்.

    பயன்படுத்தும் முறை: ஒரு பப்பாளிப் பழத்துண்டை பொடிதாக நறுக்கவும். பின்னர் அதை மிக்சியில் போட்டு கூழாக அரைக்கவும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்பு, பப்பாளி கூழை பஞ்சில் நனைத்து முகம், கழுத்து ஆகிய பகுதிகளில் தடவவும். இவற்றை தவிர ஆலிவ் எண்ணெய், ஷியா வெண்ணெய், கற்றாழை ஜெல், அவகேடோ பழம், சூரியகாந்தி எண்ணெய், பாதாம் எண்ணெய், வெள்ளரி காய், மோர், தயிர், விளக்கெண்ணெய், ரோஜாவில் இருந்து தயாரிக்கப்பட்ட பன்னீர் ஆகியவற்றையும் மாய்ஸ்சுரைசர்களாக உபயோகிக்கலாம்.

    • சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது
    • கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தை குறைக்கிறது.

    நமது சருமத்தை சுத்தமாகவும், அழகாகவும் காட்டுவதற்கு நாம் பல வகையான பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் கடைகளில் கிடைக்கும் தயாரிப்புகளும் நமது சருமத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

    சருமத்தை அழகாக பராமரிக்க, இன்று ரோஜா பூவால் செய்யப்பட்ட ஒரு ஸ்க்ரப் பற்றி பார்க்கவிருக்கிறோம், இது உங்கள் சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி நல்ல பளபளப்பைக் கொடுக்கும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

    ரோஜா பூ - 1 கப்(உலர்ந்தது )

    பொடித்த சர்க்கரை- 1 டீஸ்பூன்

    தேன் - 2 டீஸ்பூன்

    ரோஸ் வாட்டர் - 3 டீஸ்பூன்

    தண்ணீர் - 1 டீஸ்பூன்

    முதலில் உலர்ந்த ரோஜா இதழ்களை மிக்ஸியில் அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த ரோஜா, பொடித்த சர்க்கரை, தேன், ரோஸ் வாட்டர் மற்றும் தண்ணீர் ஆகியவற்றைப் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த ஸ்க்ரப்பை உங்கள் முகத்தில் நன்றாக தேய்த்து பின் முகத்தில் 10 நிமிடம் விடவும்.

    10 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். உங்கள் முகம் அழகிய பூ போல மலந்திருப்பதை பார்க்க முடியும்.

    ரோஸ் வாட்டர் அனைத்து சரும வகைகளுக்கும் நன்மை பயக்கும். இது நமது சருமத்தை ஈரப்பதமாக்குகிறது, பருக்களைக் குறைக்கிறது, வீக்கத்தைக் குறைக்கிறது, சுருக்கங்களைக் குறைக்கிறது மற்றும் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையத்தையும் குறைக்கிறது. தினமும் இரவில் தூங்கும் முன் ரோஸ் வாட்டரைப் பயன்படுத்தினால், அது உங்கள் சருமத்திற்குப் புதிய பொலிவைத் தரும்.

    • ஆரஞ்சுதோலில் சருமத்தை பாதுகாக்கும் பல்வேறு சத்துக்கள் உள்ளது.
    • இன்று ஆரஞ்சுதோலை சருமத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

    ஆரஞ்சு பழத்தோலை கழுவி சுத்தமாக காய வைத்து, அதனை பவுடராக அரைத்துக் கொள்ளவும்.இதனை ஒரு கண்ணாடி டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.இதனை பயன்படுத்தி பல முறைகளில் முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை அழகாக்கலாம்.

    ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேன் ,1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை இளஞ்சூடான நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர ,பொலிவான முக அழகு கிடைக்கும்.

    ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 1 மே.கரண்டி , தயிர் 2 மே.கரண்டி இரண்டையும் சேர்த்துக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்கள் அப்படியே இருந்து விட்டு , முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திலுள்ள இறந்த செல்கள் நீங்கி , அழகான தெளிவான முக அழகு கிடைக்கும்.

    ஆரஞ்சு பழத்தோல் பவுடரில் 2 மே.கரண்டி, பால் 1 மே.கரண்டி , 1 மே.கரண்டி தேங்காய் எண்ணெய் மூன்றையும் ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசவும். 15 நிமிடங்களின் பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2,3 தரம் செய்து வர முகத்திற்கு அழகான நிறம் கிடைப்பதோடு சருமத்தில் உள்ள மருக்கள்,கரும்புள்ளிகள், நீங்கி விடும்.

    2 மே.கரண்டி பாலில் 5 பாதாம் பருப்புகளை சேர்த்து அரைத்து அதனுடன் 1 மே.கரண்டி அளவு ஆரஞ்சு பழத்தோல் பவுடரையும் சேர்த்து குழைத்து முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். 15 -20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். சருமத்துக்கு ஆரோக்கியம் கொடுப்பதோடு , இது முகத்தை பளிச்சிட வைக்கும்.

    • முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.
    • சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளிச்சாறு முக அழகிற்கு ஏராளமான நன்மைகளைத் தருகின்றது. தக்காளிச்சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது.மேலும் முகத்திலுள்ள இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.இதனால் முக அழகு தெளிவடைகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது.

    முகப்பரு பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் தக்காளியை பயன்படுத்தினால் முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு தக்காளியிலுள்ள விட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம். சருமத்துளைகள் சுருங்கும் சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும்.

    தயிர் மற்றும் தக்காளி சாறு இரண்டையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் மசாஜ் செய்து கழுவ, தழும்புகள் மறைந்து சருமம் பிரகாசமாக மின்னும்.

    தேனில் தக்காளித் துண்டை நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும். பருக்களால் ஏற்படும் தோல் சிவந்து போவதையும் இது குறைக்கிறது.

    கிளிசரின் உடன் தக்காளி சாற்றை கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.

    அதிக நேரம் வெயிலில் சுற்றி முகம் கருமையடைந்து இருப்பின், தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டுகளால் முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். கருமை விரைவில் அகன்றுவிடும்.

    முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். இதனால் முகம் பொலிவுடன் காணப்படும்.

    முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் முகத்தில் உள்ள எண்ணெய்பசை அகன்றுவிடும்.

    தினமும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

    தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை (Face pack) வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், முகத்தில் அழகு ஜொலிக்கும்.

    • கரித்தூள் பேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன.
    • கரித்தூளை முகத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

    சரும பராமரிப்பு விஷயத்தில் ஃபேஸ் மாஸ்க் மிக மிக முக்கியமானது. அதிலும் கரித்தூள் ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு பல நன்மைகளை தருகின்றன. முகப்பிரச்சனைகளைச் சரி செய்ய இதை பயன்படுத்தலாம். முகப்பரு பிரச்சனை தொடங்கி பல சரும பாதிப்புகளை இது சரிசெய்கிறது. கரித்தூளை முகத்திற்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.

    தேவையான பொருட்கள்

    கரித்தூள்- 1 டீஸ்பூன்

    புரோபயாடிக் காப்ஸ்யூல் - 1

    ஆப்பிள் சைடர் வினிகர் - 2 டீஸ்பூன்

    அத்தியாவசிய எண்ணெய் - 1 சொட்டு

    ஒரு கிண்ணத்தில் கரித்தூள், புரோபயாடிக் காப்ஸ்யூல், ஆப்பிள் சைடர் வினிகர், அத்தியாவசிய எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்யவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி சுமார் 15 நிமிடங்கள் அப்படியே விடவும். உலர்ந்ததும், அதை குளிர்ந்த நீரில் கழுவவும். உங்கள் சருமத்தில் ஈரப்பதத்தை மீண்டும் நிரப்ப மாய்ஸ்சரை தடவவும். இப்படி மாதம் 2 முறை செய்தால் போது உங்கள் முகம் பளிச்சிடும்.

    முகத்தை முதலில் அழுக்குகள் இன்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்கு உங்களது முகத்தில் க்ளேன்சரை போட்டு நன்றாக மசாஜ் செய்து துடைத்து விட வேண்டும். க்ளேன்சர் இல்லை என்றால், பாலை கொண்டு முகத்தில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் பளபளப்பாகும்.

    மாஸ்க் தயாரிக்க முதலில் கரித்துண்டை (1 டீஸ்பூன்) சேர்த்துக் கொள்ள வேண்டும். தேன் அல்லது முல்தானி மட்டியை (1 டீஸ்பூன்)இந்த கரித்துண்டுகளுடன் சேர்த்துக் கொள்ளலாம். இது ஒரு க்ரீம் போன்ற பதத்திற்கு வர வேண்டும்.

    இந்த மாஸ்க்கை உங்களது முகம் முழுவதும் நன்றாக தடவிக் கொள்ளுங்கள். முழுமையாக 20 முதல் 40 நிமிடங்கள் வரை இந்த மாஸ்க்கை முகத்திலேயே விட்டுவிடுங்கள். பின்னர் இந்த மாஸ்க்கை கீழ் இருந்து மேலாக உரித்து எடுக்க வேண்டும்.

    மாஸ்க்கை உரித்து எடுத்தவுடன், தண்ணீரை கொண்டு கழுவ கூடாது. ஒரு சுத்தமான துணியால் முகத்தை நன்றாக துடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் சருமத்துளைகள் அடைவதற்காக டோனரை உபயோகிக்க வேண்டும்.

    இந்த மாஸ்க்கை போட்டவுடன் குறைந்தது 8 மணிநேரத்திற்காவது சோப்பை பயன்படுத்தாமல் இருக்க வேண்டியது அவசியம். முகத்தையும் கழுவ வேண்டாம். இதனால் முகத்திற்கு படிப்படியாக வியக்கத்தக்க மாறுதல்கள் கிடைக்கும்.

    ×