search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electoral Roll"

    • 5 சட்டமன்ற தொகுதியில் 12 லட்சத்து 68,108 வாக்காளர்கள் உள்ளனர்
    • 9,787 பேர் புதிதாக சேர்ப்பு; 35,127 பேர் நீக்கம்

    வேலூர்:

    இந்திய தேர்தல் ஆணையம் 2023 ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் வாக்காளர் பட்டியல் தயாரிக்க உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று வெளியிட்டார்.

    வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 வாக்காளர்கள் உள்ளனர். வழக்கம் போல் பெண் வாக்காளர்களே அதிகம். வேலூர் மாவட்டத்தில் 153 மூன்றாம் பாலினத்தவர் இடம் பெற்றுள்ளனர்

    வேலூர் மாவட்டத்தில் 9,787 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இறப்பு, இரு முறை பதிவு, இடமாறுதல் உள்ளிட்ட காரணங்களால் 35,127 வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

    இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 13 ஆயிரத்தி 707 ஆண் வாக்காளர்களும் 6 லட்சத்து 54 ஆயிரத்து 248 பெண் வாக்காளர்களும் 153 மூன்றாம் பாலினத்தவர் என 12 லட்சத்து 68 ஆயிரத்து 108 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    காட்பாடி தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்தது 128 ஆண் வாக்காளர்களும் 1 லட்சத்து 26 ஆயிரத்து 594 பெண் வாக்காளர்களும் 34 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 44 ஆயிரத்து 756 பேர் உள்ளனர்.

    வேலூர் தொகுதியில் 1 லட்சத்து 21 ஆயிரத்தி 822 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 491 பெண் வாக்காளர்கள் 37 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 53 ஆயிரத்து 350 பேர் உள்ளனர்.

    அணைக்கட்டு தொகுதியில் 1 லட்சத்து 23 ஆயிரத்தி 713 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 31 ஆயிரத்து 433 பெண் வாக்காளர்கள் 31 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 55 ஆயிரத்து 177 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    கீழ்வைத்தினான் குப்பம் (கே.வி.குப்பம்) (தனி) தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்தி 658 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 15 ஆயிரத்து 595 பெண் வாக்காளர்கள் 8 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 26 ஆயிரத்து 261 பேர் இடம் பெற்றுள்ளனர்.

    குடியாத்தம் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 39 ஆயிரத்தி 386 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 49 ஆயிரத்து 135 பெண் வாக்காளர்கள் 43 மூன்றாம் பாலினத்தவர் என 2 லட்சத்து 88 ஆயிரத்து 564 பேர் உள்ளனர்.

    மேலும் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் 652 இடங்களில் உள்ள 1300 வாக்குச்சாவடி மையங்களிலும் மாநகராட்சி அலுவலகம் மற்றும் வருவாய் கோட்ட அலுவலகங்கள். வட்டாட்சியர் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள், என மொத்தம்

    666 இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

    இந்த வாக்காளர் பட்டியல் இன்று முதல் 08-12-2022 வரை ஒரு மாத காலத்திற்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

    வாக்காளர்களின் பெயர் சேர்த்தல் நீக்குதல் போன்றவற்றை இணையதளம் வாயிலாகவும் பட்டியலில் சேர்க்க நீக்கவும் செய்யலாம். அத்துடன் நவம்பர்12,13,26 மற்றும் 27 ஆகிய 4 விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்கள் நடக்கவுள்ளது. இதனை மக்கள் பயன்படுத்திகொள்ள வேண்டும்.

    மாவட்டத்திலுள்ள பொதுமக்களும் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெ ற்றுள்ளதா என சரிபார்த்து,

    பெயர் சேர்க்க படிவம் 6A, ஆதார் என் சேர்க்க படிவம் 6 பி பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய படிவம் 7,திருத்தம் செய்ய படிவம் 8,முகவரி மாற்றம் செய்ய படிவம் 8A ஆகியவற்றின் விண்ணப்பம் செய்யலாம் என கலெக்டர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர்.
    • இறுதி வாக்காளர் பட்டியல் 2023 ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படுகிறது

    சென்னை :

    நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் உள்ள குழப்பங்கள், குறைகளை சரி செய்யும் நோக்கில், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு பணி கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 21 லட்சத்து 72 ஆயிரத்து 922 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 3.15 கோடி பேர் வாக்காளர் அடையாள அட்டையுடன், ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

    ஆதார் இணைப்பு திட்டத்தை நிறைவு செய்யவும், புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகிய பணிகளை மேற்கொள்ள இம்மாதம் சிறப்பு முகாம்களை நடத்த தேர்தல் கமிஷன் முடிவெடுத்து உள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்) தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கடிதம் எழுதியுள்ளார்.

    துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி, கடந்த 7-ந் தேதியோடு நிறைவடைந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் வெளியிடப்படுகிறது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில், இந்திய தேர்தல் ஆணையம், முறையான வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு (எஸ்.வி.இ.இ.பி.) என்ற விழிப்புணர்வு பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது.

    அந்தவகையில், சென்னையில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணிக்கு மயிலாப்பூரில் உள்ள செவித்திறன் குறைபாடுள்ள சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளியில் நடக்கும் பேரணியை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி அரசு முதன்மைச் செயலர் சத்யபிரதா சாகு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மயிலாப்பூரில் முக்கிய வீதிகள் வழியாக செல்லும் இந்த பேரணியில் பொதுமக்கள் வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு அளிக்கப்படுகிறது.

    2023-ம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிப்புக்கான சிறப்பு முகாம்கள் வருகிற 12, 13 மற்றும் 26, 27 (சனி, ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் நடத்தப்படுகிறது.

    சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட மனுக்கள் பரிசீலனை டிசம்பர் 26-ந் தேதி நிறைவடைகிறது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2023) ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்படுகிறது என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறினர்.

    • நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது.
    • வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    திருப்பூர்:

    தேர்தல் கமிஷன் சார்பில் ஆண்டுதோறும் நவம்பர்- டிசம்பர் மாதங்களில் வாக்காளர் பட்டியல்திருத்தப்பணி நடைபெறுகிறது.முன்னதாக வரைவு பட்டியல் வெளியிடப்படும். தொடர்ந்து பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்த பணிகள் நடைபெறும். ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

    நடப்பு ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் துவங்கியுள்ளது. வருகிற 9-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.வரும் 2023 ஜனவரி 1-ந் தேதி, 18 வயது பூர்த்தி அடைந்தோர், தங்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கலாம்.இதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தங்கள் பகுதி தாலுகா அலுவலகங்களில் உள்ள வாக்காளர் பதிவு அதிகாரியிடம் வழங்கலாம்.

    https://www.nvsp.in என்கிற வாக்காளர் சேவை போர்ட்டல்,voter Helplineஎனும் செல்போன் செயலி மூலமாகவும் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். பெயர் நீக்கம், முகவரி மாற்றம், தொகுதிக்குள் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம்.

    மேலும் தொகுதிகளில் உள்ள ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் சனி, ஞாயிறு தினங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி வருகிற 12, 13 மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் சம்பந்தப்பட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி 18 வயது பூர்த்தியானோர் வாக்காளர் பட்டியலில் தவறாமல் தங்கள் பெயர்களை சேர்க்கவும், வாக்காளர் பட்டியலில் பெயர் மாற்றம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலா ம் என திருப்பூர் மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    • 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    பல்லடம் :

    இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை 100 சதவீதம் தூய்மையாக்கவும், போலி வாக்காளர்களை ஒழிக்கவும் வாக்காளர் பட்டியலுடன் வாக்காளர்களின் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை கடந்த 1.8.2022 முதல் தொடங்கி உள்ளது. வரும் 31.3.2023-க்குள் இந்த பணியை முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு உள்ளது.

    கடந்த ஒரு மாதமாக ஏராளமான வாக்காளர்கள் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து வருகின்றனர்.இதன்படி பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் மொத்தம் 410 வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மற்றும் பச்சாபாளையம் அரசு நடுநிலை பள்ளி வாக்கு சாவடிகளில் நடந்த சிறப்பு முகாமை தாசில்தார் நந்த கோபால் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ×