search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Electioncampaign"

    கலவரம், கொலைகள் மூலம் பிரதமர் மோடி அரசியல் ஞானஸ்நானம் பெற்றிருப்பதாக மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  7 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ராய்கஞ்ச்  பகுதியில்  திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    பிரதமர் மோடி கலவரம், கொலைகள் மூலம் அரசியல் ஞானஸ்நானம் பெற்றவர் ஆவார். உலகிலேயே மிகப்பெரிய சர்வாதிகாரியாக திகழ்ந்த ஹிட்லர் இன்று உயிருடன் இருந்திருந்தால், மோடியின் செயல்பாடுகளை கண்டு தற்கொலை செய்திருப்பார்.   மோடி பாசிசத்தின் ராஜா. காங்கிரஸ் தனித்து மத்தியில் ஆட்சி அமைக்க இயலாது. ஏனென்றால், பாஜகவை எதிர்த்து வலிமையுடன் போட்டியிடும் திறன் காங்கிரசுக்கு இல்லை.

    ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால், மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் பாஜகவை வீழ்த்தவே கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளன. மோடி அதிகாரத்தை விட்டு வெளியேறிய பின்னர் எதிர்கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து புதிய இந்தியாவை உருவாக்க செயல்படுவோம்.   

    இவ்வாறு அவர் பேசினார். #LoksabhaElections2019 #MamataBanerjee
    மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் என்ற தனிநாடு உருவானதற்கு காங்கிரஸ் தான் பொறுப்பு என குற்றம் சாட்டியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    லத்தூர்:

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் லத்தூர் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    முதன்முறையாக வாக்களிக்கப்போகும் வாக்காளர்களே, பாலக்கோட்டில் பயங்கரவாதிகள் மீது  பதிலடி தாக்குதல் நடத்தியவர்களுக்காக உங்கள் ஓட்டினை பதிவு செய்யுங்கள்.  சுதந்திரத்திற்கு முந்தைய கால கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டிருந்தால் பாகிஸ்தான் எனும் நாடே உருவாகியிருக்காது. நக்சல்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் அச்சுறுத்தல்களில் இருந்து இந்தியாவை காப்பாற்றுவதே எனது குறிக்கோளாகும்.  

    ஜம்மு காஷ்மீரினை பிரித்து, அதற்கென தனி பிரதமரை உருவாக்கும் எண்ணத்துடனே தேசியவாத காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை, பாகிஸ்தானின் குரலை பிரதிபலிப்பதாக உள்ளது.  ஆனால்,  நேற்று பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கை, நாட்டின் பாதுகாப்பு, விவசாயிகளின் நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இத்தனை சாதனைகள் நிகழ்த்த காரணம் மக்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கையே ஆகும்.

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    பாராளுமன்ற தேர்தலையொட்டி, ஒடிசாவில் நடைபெற்ற பிரசாரப்பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்ட பிரதமர் மோடி, நேர்மையான ஆட்சியா? அல்லது ஊழல் ஆட்சியா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என கூறியுள்ளார். #PMModi #LoksabhaElections2019
    சுந்தர்கார்க்:

    ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி  4 கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் சுந்தர்கார்க் பகுதியில், பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:



    இந்த முறை ஒடிசாவில் தாமரை மலர்ந்தே தீரும். வெற்றியை பாஜக அள்ளிப்பருகும்.  ஒடிசா மாநிலத்தில் இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தாமரை மலரும் என்று நான் பெருமையுடம் சொல்லுவேன். அதேப்போல் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாஜக நாட்டின் வலிமையான மற்றும் தீர்க்கமான கட்சியாகும். நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பாஜக செயல்படுகிறது. எனவே நேர்மையான ஆட்சி தேவையா? அல்லது  ஊழல் ஆட்சி தேவையா? என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

    நாட்டிற்கும், ஒடிசாவிற்கும் வரப்போகும் பாராளுமன்ற தேர்தல் நல்ல எதிர்காலத்தை உருவாக்கப்போகிறது.  தொண்டர்களின் கடுமையான உழைப்பிலும், வியர்வையிலும் உருவானது தான் இந்த பாஜகவே தவிர, பணத்தினாலோ அல்லது வாரிசு முறையிலோ உருவாக்கப்படவில்லை. தற்போதும் தொண்டர்களின் வியர்வையினால் தான் வளர்ந்து வருகிறது.  எனவே தான் இன்று நாட்டில், மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக பாஜக  விளங்குகிறது. 

    இவ்வாறு அவர் பேசினார். #PMModi #LoksabhaElections2019
    ×