என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Election contesting prevented"
சென்னை:
தினகரன் ஆதரவாளர்கள் 18 பேரின் எம்.எல்.ஏ. பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கோர்ட்டு உறுதி செய்ததைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் விடுதியில் உள்ள அவர்களது அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.
இதையடுத்து தங்க தமிழ்ச் செல்வன் தனது அறையில் இருந்த கோப்புகள், ஆவணங்களை எடுத்துச் செல்ல வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது பழி வாங்கும் நடவடிக்கை. சிறிது அவகாசம் கொடுத்து இருக்கலாம். தகுதி நீக்கம் செய்யப்பட்ட நாளில்இருந்து வாடகை பாக்கி செலுத்தச் சொல்லி உள்ளனர்.
தகுதி நீக்க வழக்கில் மேல்முறையீடு செய்தால் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். இருப்பினும் மேல் முறையீடு செய்வதில்லை, தேர்தலை சந்திப்பது என்று முடிவு எடுத்துள்ளோம். வரும் 9-ந்தேதி பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்தித்து இதுபற்றி ஆலோசனை நடத்துவோம்.
18 பேரும் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவோம். நாங்கள் போட்டியிடுவதற்கு தொகுதியின் தேர்தல் அதிகாரி மூலம் கலெக்டர்கள் தடை விதிக்க கூடும் என்பதால் நாங்கள் முன் கூட்டியே இடைத்தேர்தலில் போட்டியிட தடைஇல்லை என சுப்ரீம்கோர்ட்டில் உத்தரவு பெறுவோம்.
18 தொகுதிகள் மட்டுமல்லாமல் திருவாரூர், திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். தோல்வி பயத்தில் இருக்கும் ஆட்சியாளர்களுக்கு தேர்தல் நடத்த விருப்பம் இல்லை. எனவே பாராளுமன்ற தேர்தலுடன் சேர்த்துதான் சட்டசபை இடைத்தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. தேர்தலில் எங்களது பிரதான எதிரி தி.மு.க. அடுத்த எதிரி அ.தி.மு.க.
பசும்பொன்னில் தேவர் குருபூஜையில் மரியாதை செலுத்த டி.டி.வி.தினகரன் சென்றபோது 7 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் திரளாக கூடினர். அப்போது மக்கள்தான் அ.தி.மு.க. பேனரை கிழித்தனர். எங்கள் கட்சியினர் கிழிக்கவில்லை. ஆட்சியின் மீதுள்ள வெறுப்பில் மக்கள் இவ்வாறு செய்துள்ளனர். #ThangaTamilSelvan #ADMK
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்