search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "document"

    • போலி ஆவணம் தயாரித்து வியாபாரியிடம் ரூ.6.23 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி யன் (வயது48). இவர் பெரிய ரதவீதியில் கார் மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாலசுப்பிர மணியன் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்த மணி வண்ணன், முருகன், முத்து மாரி, தீபா ஆகிய 4 பேரும் என்னிடம் போலி ஆவணம் வாயிலாக 6.23 லட்சம் ரூபாய் கடன் வாங்கி சென்றனர். அதனை அவர்கள் திருப்பி தரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர் பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பண த்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பி டப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வு பிரிவு போலீ சார் மணிவண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை என்னைவிட்டு பிரிந்து வாழ்வதால் ஆவணங்களில் இருந்து அவரது பெயரை நீக்ககோரி பாகிஸ்தான் பெண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானை சேர்ந்த பெண் ததீர் பாத்தீமா (18). தந்தை இவரை விட்டு பிரிந்து விட்டார். தாயுடன் சேர்ந்து வாழும் இவர் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதில் ‘‘எனது தந்தை நான் வேண்டாம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். எனவே பிறப்பு சான்றிதழ் உள்ளிட்ட எனது சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களில் இருந்தும் அவரது பெயரை நீக்கி உத்தரவிட வேண்டும்.

    குழந்தைகள் வேண்டாம் என கை கழுவிவிட்டு சென்ற பெற்றோரின் பெயரை குழந்தைகள் ஏன் சுமக்க வேண்டும்’’ என கேள்வி எழுப்பியுள்ளனர்.

    இந்த வழக்கு தலைமை நீதிபதி மியான் சாகிப் நிகார், நீதிபதிகள் உமர் அதாபண்டியால் இனாசுல் அக்சான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஆவணங்கள் குறித்த விவரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    ×