search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலி ஆவணம் தயாரித்து வியாபாரியிடம் ரூ.6.23 லட்சம் மோசடி
    X

    மோசடி

    போலி ஆவணம் தயாரித்து வியாபாரியிடம் ரூ.6.23 லட்சம் மோசடி

    • போலி ஆவணம் தயாரித்து வியாபாரியிடம் ரூ.6.23 லட்சம் மோசடி செய்த 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத்தர வேண்டும்.

    மதுரை

    மதுரை திருப்பரங்குன்றம் திருமுருகன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி யன் (வயது48). இவர் பெரிய ரதவீதியில் கார் மெண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் பாலசுப்பிர மணியன் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வுப் பிரிவு போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    திருப்பரங்குன்றம் கீழத் தெருவை சேர்ந்த மணி வண்ணன், முருகன், முத்து மாரி, தீபா ஆகிய 4 பேரும் என்னிடம் போலி ஆவணம் வாயிலாக 6.23 லட்சம் ரூபாய் கடன் வாங்கி சென்றனர். அதனை அவர்கள் திருப்பி தரவில்லை. எனவே நான் அவர்களிடம் இது தொடர் பாக கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்தனர். எனவே போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி பண த்தை மீட்டுத்தர வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பி டப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில் திருப்பரங்குன்றம் குற்ற புலனாய்வு பிரிவு போலீ சார் மணிவண்ணன் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×