என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "doctor jewelry robbery"
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள சிறுமலைப்பிரிவு வாழைக்காய்பட்டியைச் சேர்ந்தவர் மீனாள் (வயது 65). இவர் அதே பகுதியில் தனியார் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். கணவர் கிருஷ்ணமூர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
அவரது மகன் வியாபார நிமித்தமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இன்று காலை மீனாள் தனது வீட்டு முன்பு நின்று கொண்டு இருந்தபோது ஒரு காரில் இருந்து 2 பேர் வந்தனர்.
அவர்கள் மீனாளிடம் விலாசம் கேட்பது போல அருகில் வந்து திடீரென கத்தியை காட்டி வீட்டுக்குள் விரட்டினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்தருந்த 2½ பவுன் தங்க செயினை பறித்துக் கொண்டனர்.
கத்தி முனையில் ஒரு கொள்ளையன் அவரை மிரட்டிக் கொண்டிருந்த போதே மற்றொருவர் வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜெயசந்திரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் செழியன், வேலுமணி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் பதிவு செய்யப்பட்டது. அக்கம் பக்கம் நடத்திய விசாரணையில் காரில் 4 பேர் வந்ததும் அதில் 2 பேர் காரில் இருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் சென்று கொள்ளையடித்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்