என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "DifferentlyAbled People"
- ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.
- மாற்றுத்திறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார்.
ஆலங்குளம்:
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தார். அவர்களுக்கான உபகரணங்கள் பெறுவதற்கான விண்ணப்பங்களை பெற்று, மாற்றுத்திறனாளிக்களுக்கான நலத்திட்டங்களை யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் திலகராஜ், மாற்றுத்திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் அருள்சுப்பிரமணியன், ஆலங்குளம் வட்டார வள மைய மாற்றுத்திறனாளிகள் சிறப்பு ஆசிரியர்கள் அருள்ஞானஜோதி மற்றும் ஜெயஜோதி, மாற்றுத்திறனாளி சிறப்பு ஆசிரியை பிரியா மற்றும் சமூக ஆர்வலர்கள் உட்பட ஏராளாமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவைப்படும் உபகரணங்கள், வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிக்களுக்கான உதவித்தொகை, இலவச பஸ்பாஸ் போன்ற உதவிகள் பெறுவதற்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் இரண்டு நபர்களுக்கு செவித்திறன் கேட்டல் கருவி வழங்கப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்