search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cracker explode"

    கும்மிடிப்பூண்டி அருகே வீட்டில் இருந்த பட்டாசு வெடித்ததில் படுகாயமடைந்த 2 பேரும் கவலைக்கிடமான நிலையில் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டியை அடுத்த எளாவூரை சேர்ந்தவர் அல்லாபகஷ் (வயது54). இவர் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள அறையில் மாந்தீரிகம் செய்வது, தாயத்து கட்டுவது உட்பட பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்.

    இவரது வீட்டின் அருகே உள்ள தனி இடத்தில் உறவினரான குஜரத் அலி என்பவர் ‘அமீர் பயர் ஒர்க்ஸ்’ என்ற பெயரில் சிறிய அளவிலான பட்டாசு தொழிற்சாலையை அனுமதி பெற்று நடத்தி வருகிறார்.

    இதற்கு அல்லாபகஷ் உதவியாக இருந்தார். பட்டாசுகளை தனது அறையில் வைத்து விற்று வந்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்று இரவு வீட்டையொட்டி உள்ள தனியறையில் அல்லாபகஷ் மற்றும் ஆம்பூரில் இருந்து வந்த அவரது உறவினர் கலிக்அகமது (39) ஆகியோர் இருந்தனர். அந்த அறையில் நாட்டுவெடிகள் உள்பட பல்வேறு பட்டாசுகள் ஒரு பையில் இருந்தன.

    அப்போது வழிபாட்டுக்காக அல்லாபகஷ், ஊதுபத்தியை கொளுத்தினார். இதில் இருந்து விழுந்த நெருப்பு தவறுதலாக பட்டாசு மேல் விழுந்தது. இதையடுத்து அறையில் இருந்த நாட்டுவெடிகள், பட்டாசுகள் கண் இமைக்கும் நேரத்தில் நாலாபுறமும் வெடித்து சிதறின.

    இதில் அல்லாபகசும், கலிக்அகமதுவும் உடல் கருகினர். மேலும் அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். கவலைக்கிடமான நிலையில் அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் விசாரணை நடத்தினார். இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை அஜாக்கிரதையாக கையாண்டதாக பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் குஜரத் அலியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×