என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Coimbatore accident"
கன்னியாகுமரி மாவட்டம் சடைய நல்லூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் நரேஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
கோவை காந்தி புரத்தில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். நரேஷ் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். கோவை -அவினாசி சாலை லட்சுமி மில் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது பீளமேடுக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ் திடீரென நரேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர் தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் நரேஷ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் நரேஷ் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக லட்சுமி மில் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நரேஷ் விபத்தில் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவர் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். #Tamilnews
கோவை:
கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 80). இவர் அந்த பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார்.
இவர் இன்று காலை பால் வாங்கிக்கொண்டு மருதமலை ரோடு பிளேக் மாரியம்மன் கோவில் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியாக மருதமலை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சுப்பையா மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் ரோட்டோரத்தில் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த புலியகுளம் கல்லுகுழி ரோட்டை சேர்ந்த சுப்பிரமணி (51) என்பவர் மீதும் மோதியது.
இந்த விபத்தில் சுப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுப்பிரமணியத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக கோவை- மருதமலை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்து விரைந்து வந்தனர். விபத்தில் பரிதாபமாக இறந்த சுப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்