search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coimbatore accident"

    கோவையில் இன்று அரசு பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கன்னியாகுமரி மாவட்டம் சடைய நல்லூரை சேர்ந்தவர் மனோகரன். இவரது மகன் நரேஷ் (20). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் 4-ம் ஆண்டு படித்து வந்தார்.

    கோவை காந்தி புரத்தில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார். நரேஷ் இன்று காலை மோட்டார் சைக்கிளில் கல்லூரிக்கு சென்றார். கோவை -அவினாசி சாலை லட்சுமி மில் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த போது பீளமேடுக்கு அரசு பஸ் சென்றது. இந்த பஸ் திடீரென நரேஷ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் தவறி கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் நரேஷ் மீது ஏறி இறங்கியது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிறிது நேரத்தில் நரேஷ் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்து காரணமாக லட்சுமி மில் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நரேஷ் விபத்தில் பலியான சம்பவத்தை கேள்விப்பட்டதும் அவர் படித்து வந்த கல்லூரி மாணவர்கள் சோகத்தில் ஆழ்ந்து உள்ளனர். #Tamilnews
    கோவை அருகே விபத்தில் மருந்துகடை உரிமையாளர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை பி.என்.புதூரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 80). இவர் அந்த பகுதியில் மருந்து கடை நடத்தி வந்தார்.

    இவர் இன்று காலை பால் வாங்கிக்கொண்டு மருதமலை ரோடு பிளேக் மாரியம்மன் கோவில் வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக மருதமலை நோக்கி சென்ற கார் திடீரென கட்டுபாட்டை இழந்து சுப்பையா மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த கார் ரோட்டோரத்தில் சைக்கிளில் நின்று கொண்டு இருந்த புலியகுளம் கல்லுகுழி ரோட்டை சேர்ந்த சுப்பிரமணி (51) என்பவர் மீதும் மோதியது.

    இந்த விபத்தில் சுப்பையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய சுப்பிரமணியத்தை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து காரணமாக கோவை- மருதமலை ரோட்டில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த தகவல் கிடைத்ததும் மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவஇடத்து விரைந்து வந்தனர். விபத்தில் பரிதாபமாக இறந்த சுப்பையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×