search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coconut tree farmer suicide"

    கஜா புயலால் தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் ஏற்பட்ட மனவேதனையில் தஞ்சையைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தற்கொலை செய்துள்ளார். #GajaCyclone #FarmerSuicide
    தஞ்சை:

    தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை கஜா புயல் புரட்டிப்போட்டுள்ளது. புயல் மற்றும் மழையால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக விவசாயிகள் பேரழிவை சந்தித்துள்ளனர். தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்ததால் கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் தஞ்சை மாவட்டம் சோழகன்குடிகாடு கிராமத்தில் தென்னை விவசாயி சுந்தர்ராஜ் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனக்கு சொந்தமான 5 ஏக்கர் தென்னந்தோப்பு புயலால் பாதிக்கப்பட்டதால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. #GajaCyclone #FarmerSuicide
    ×