search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CELL PHONE CONFISCATION"

    • 2 பேர் கைது
    • செல்போன், பைக் பறிமுதல்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த பரித்தி புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (வயது 19). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை அரக்கோணம் எஸ்.ஆர்.கேட் அருகே நடந்து சென்று கொண் டிருந்தார்.

    செல்போன், பணம் பறிப்பு

    அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 2 பேர் கத்தியைக் காட்டி மிரட்டி ஜீவாவிடம் இருந்து பணம் மற்றும் செல் போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இது குறித்து ஜீவா அரக்கோணம் டவுன் போலீஸ் நிலை யத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா வழக்குப் பதிவு செய்தார்.

    இதைதொடர்ந்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அரக்கோணம் - காஞ்சீபுரம் சாலையில் வாகன சோதனையின் போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

    அவர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தியதில் அவர்கள் அரக்கோணம் கிருஷ் ணாம் பேட்டையை சேர்ந்த முகமது உசேன் (27), கருமாரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த அருள்ராஜ் (24) என்பதும், ஜீவாவிடம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது.

    இதனையடுத்த அவர்களை போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.1,000 மற்றும் செல்போன், கத்தி, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    • கூட்ட நெரிசலில் துணிகரம்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் அகன் நகர் பகுதியை சேர்ந்த அருள்ராஜ். அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரெயிலுக்காக காத்திருந்தார்.

    அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் இவரது செல்போனை திருடிச் சென்றார். இது குறித்து அருள்ராஜ் அரக்கோணம் ரெயில்வே போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடி சென்ற நபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நடைமேடையில் சுற்றி திரித்து கொண்டிருந்த வாலிபரை ரெயில்வே போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    அதில் அவர் திருவள்ளூரை அடுத்த செவ்வாய்பேட்டை திருவூர் பகுதியை சேர்ந்த அருண் குமார் (வயது 25) என்பதும் செல்போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் செல்போனை பறிமுதல் செய்து அருண்குமாரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • முகமது அஸ்மீர் திருச்சி ரெனால்ட்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டிருந்தார்.

    திருச்சி

    திருச்சி கே.கே.நகர் தங்கையா நகரை சேர்ந்தவர் முகமது அஸ்மீர் (வயது 26). இவர் திருச்சி ரெனால்ட்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தி முனையில் இவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தேவி வழக்குப்பதிந்து, இது தொடர்பாக சதீஷ், ராஜசேகர் , ஜான் டைசன் ஆகிய 3 வாலிபர்களை கைது செய்தார். அவர்களிடமிருந்து செல்போன், பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் சதீஷ் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ராஜசேகர் மீது பாலக்கரை, மதுரை காவல் நிலையங்களில் 6 வழக்குகளும், ஜான் டைசன் மீது திருவரம்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×