search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சியில் வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு - 3 பேர் கைது
    X

    திருச்சியில் வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பு - 3 பேர் கைது

    • வாலிபரிடம் கத்தி முனையில் செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • முகமது அஸ்மீர் திருச்சி ரெனால்ட்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டிருந்தார்.

    திருச்சி

    திருச்சி கே.கே.நகர் தங்கையா நகரை சேர்ந்தவர் முகமது அஸ்மீர் (வயது 26). இவர் திருச்சி ரெனால்ட்ஸ் ரோட்டில் உள்ள ஒரு பங்க் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 வாலிபர்கள் கத்தி முனையில் இவரிடம் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பி சென்று விட்டனர்.

    இது குறித்த புகாரின் பேரில் செசன்ஸ் கோர்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாமளா தேவி வழக்குப்பதிந்து, இது தொடர்பாக சதீஷ், ராஜசேகர் , ஜான் டைசன் ஆகிய 3 வாலிபர்களை கைது செய்தார். அவர்களிடமிருந்து செல்போன், பணம், கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் சதீஷ் மீது பாலக்கரை காவல் நிலையத்தில் 4 வழக்குகளும், ராஜசேகர் மீது பாலக்கரை, மதுரை காவல் நிலையங்களில் 6 வழக்குகளும், ஜான் டைசன் மீது திருவரம்பூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×