search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CELL PHONE CONFISCATION"

    • 6 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் கொண்டகுப்பம் கிராமம்,சிலோன் காலனி அண்ணா நகரை சேர்ந்தவர்கள் ரவிகுமார் (வயது42), மணிகண்டன்(40).

    இவர்கள் 2 பேரும் நேற்று முன்தினம் இரவு பள்ளேரி- வசூர் சாலையில் பொன்னை ஆற்று பாசன கால்வாய் பாலத்தில் அமர்ந்து மது குடித்தனர்.

    அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத 6பேர் கொண்ட கும்பல் ரவிக்குமார் மற்றும் மணிகண்டனை தாக்கிவிட்டு ரவிக்குமார் வைத்திருந்த ரூ.20ஆயிரம் பணம், மற்றும் 2 பேரின் செல்போன்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதில் ரவிக்குமாருக்கு வலது கையில் காயம் ஏற்பட்டு பூட்டுதாக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து ரவிக்குமார் சிப்காட் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எபனேசர் எட்டையபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரிடம் சாலையில் நின்ற ஒரு வாலிபர் ‘லிப்ட்’ கேட்டு ஏறினார்.
    • அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் எபனேசரை பிடித்துக் கொண்டு அவரின் தலையில் கத்தியால் வெட்டினர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி திரேஸ் புரத்தை சேர்ந்தவர் எபனே சர். ( வயது 24 ). இவர் எட்டையபுரம் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது அவரிடம் சாலையில் நின்ற ஒரு வாலிபர் 'லிப்ட்' கேட்டு ஏறினார்.

    சிறிது தூரம் சென்ற நிலையில் அந்த வாலிபர் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி எபனேசரை வாகனத்தை நிறுத்த சொல்லி உள்ளார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்திய போது அங்கு ஏற்கனவே நின்று கொண்டிருந்த 3 பேர் எபனேசரை பிடித்துக் கொண்டு அவரின் தலையில் கத்தியால் வெட்டினர்.

    பின்னர் அவரது செல்போனை பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர். அதில் தூத்துக்குடி கங்கா ராஜேஸ்வரி காலனி சேர்ந்த மகேஷ் குமார் (24),வடக்கு சங்கரபேரியை சேர்ந்த அஜித்குமார்( 23 ), குறிஞ்சி நகர் சேர்ந்த அருண்குமார் (25 )மற்றும் ஈஸ்வரன் (42) ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். 

    • செங்கல் சூளை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இளங்கோ என்பது தெரியவந்தது.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே ஆனத்தூர் பகுதியை சேர்ந்தவர் வைத்தேஸ். இவரது மனைவி வரலட்சுமி (வயது 32). இவர் கடந்த 3-ந்தேதி இரவு 7 மணியளவில் அந்த பகுதியில் உள்ள செங்கல் சூலை வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வரலட்சுமியை வழிமறித்து நகை, பணத்தை தருமாறு மிரட்டினார். உடனே சுதாரித்து கொண்ட வரலட்சுமி அங்கிருந்து ஓடினார். ஆனால் அவரை விடாமல் பின்தொடர்ந்து ஓடிவந்து அவரை மடக்கிய மர்ம நபர் அவரிடமிருந்த தங்க வளையல், செல்போனை பறித்துகொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து வரலட்சுமி திருவெண்ணைநல்லூர் போலீசில் புகார் செய்தார். 

    புகாரின்பேரில் திருவெண்ணைநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குபதிவு செய்து வரலட்சுமியை வழிமறித்து தங்க வளையல், செல்போனை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வந்த நிலையில் வரலட்சுமியின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு போன் சிக்னல் மூலம் தேடியபோது திருவெண்ணைநல்லூர் அருகே டி.குமாரமங்கலம் பகுதியை சேர்ந்த இளங்கோ என்பது தெரியவந்தது. உடனே அங்கு விரைந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தபோது வரலட்சுமியிடம் சென்போன் மற்றும் தங்க வளையலை திருடியதை ஒப்பு கொண்டார். உடனே இளங்கோவை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து தங்க வளையல், செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • சக பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்
    • போலீசார் மடக்கி பிடித்தனர்

    அரக்கோணம்:

    நாகர்கோவிலில் இருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 9.45 மணியளவில், அரக்கோணம் ரெயில் நிலையத்தில் உள்ள 6-வது பிளாட்பாரத்திற்கு வந்தது.

    அப்போது பயணிகள் சிலர் இறங்கினர். சிலர் ரெயிலில் ஏறியதும் சிறிது நேரம் கழித்து ரெயில் புறப்பட்டது.

    அந்த நேரத்தில் ரெயிலின் படியில் நின்று கொண்டிருந்த கன்னியாகுமரியை சேர்ந்த கண்ணன் என்பவரிடம் இருந்து செல்போனை பிளாட்பாரத்தில் இருந்த ஒரு வாலிபர் பறித்து கொண்டு ஓடினார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த கண்ணன் கூச்சலிட்டார். உடனடியாக சக பயணிகள் பெட்டியில் இருந்த அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரெயிலை நிறுத்தினர்.

    சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் உஸ்மான், ரெயில்வே இன்ஸ்பெக்டர் வடிவுக்கரசி மற்றும் போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில், அவர் கர்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சேர்ந்த சக்திவேல் (வயது 24) என்பது தெரியவந்தது.

    இவர் ஏற்கனவே பலமுறை ரெயிலில் பயணிகளிடம் செல்போன் பறித்தது தெரியவந்தது. மேலும், இவர் மீது பங்கா ருபேட்டை, ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.

    இதுகுறித்து, அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சக்திவேலை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.20,000 மதிப்பிலான செல்போனை பறிமுதல் செய்தனர்.

    • சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினர்
    • போலீசார் தீவிர விசாரணை

    வேலூர்:

    சத்துவாச்சாரியைச் சேர்ந்தவர் பாலாஜி (48), வேலூர் எஸ்பி தனிப்பிரிவு ஏட்டாக பணி புரிகிறார். இவர், காகிதப்பட்டறையில் உள்ள ஏடிஎம் ஒன்றில் பணம் எடுக்க பைக்கில் சென்றார். தொடர்ந்து, செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

    அப்போது, அங்கு வந்த 3 பேர், திடீரென செல்போனை பறித்து கொண்டு ஓடினர். அதிர்ச்சி அடைந்த பாலாஜி, துரத்திச்சென்று பிடிக்க முயன்றார். ஆனால், தப்பி ஓடி விட்டனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக் களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய் தனர்.

    அதில் செல்போன் பறித்து தப்பிய காகிதப்பட்டறை புதுத்தெருவை சேர்ந்த சிவா (26), சுகுமார் (23) தேவராஜ் (26) என தெரிந்தது, பின்னர் 3 பேரையும் கைதுசெய்து, செல்போனை பறிமுதல் செய் தனர். இதுபோன்று வேறு எங்கா வது கைவரிசை காட்டினரா? என அவர்க ளிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கி செல்போனை பறித்த மர்ம நபர்கள்
    • இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார்

    திருச்சி

    திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (வயது 18). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு நகைக்கடை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் இவரை எதிர்பாராத விதமாக தாக்கி, செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்கள் ஓடத்துறை மேம்பாலம் பகுதியில் சென்று விட்டனர். உடனே பாலமுருகன் இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வாலிபரை தாக்கி மோட்டார் சைக்கிள்- செல்போன் பறிக்கப்பட்டது.
    • தொடர் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

    மதுரை

    மதுரை விமான நிலையம் அருகே உள்ள சம்பக்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் குருமணி(வயது34). இவர் அவனியாபுரத்தை அடுத்துள்ள மண்டேலாநகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த கொள்ளை கும்பல் திடீரென குருமணியை மறித்து சரமாரியாக தாக்கினர்.

    தொடர்ந்து அவருடைய மோட்டார்சைக்கிள், செல்போனையும் பறித்துக்கொண்டு அந்த கும்பல் தப்பியது. இதுகுறித்த புகாரின்பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை தேடி வருகின்றனர்.

    அவனியாபுரத்தில் இருந்து விமான நிலையம், மண்டேலாநகர் செல்லும் சாலைகளில் பெரும்பாலான பகுதிகளில் தெருவிளக்குகள் இல்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்திருக்கும். இதனை பயன்படுத்தி சாலையில் மறைந்திருந்து சமூக விரோதிகள் வாகன ஓட்டிகளையும், அந்த வழியாக நடந்து செல்வோரையும் தாக்கி நகை-பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    குறிப்பாக அவனியாபுரம் ரிங்ரோடு, மண்டேலாநகர், அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் ரோடுகளில் அண்மை காலமாக வழிப்பறி சம்ப வங்கள் அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இரவு நேரங்களில் பீதியுடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், அவனியாபுரம போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளை, வழிப்பறி போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. வில்லா புரம் ஹவுசிங்போர்டு, மீனாட்சி நகர், அவனியா புரம் உள்ளிட்ட பகுதிகளில் தனியாக நடந்து செல்வோரை குறிவைத்து மோட்டார் சைக்கிளில் வரும் கும்பல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

    எனவே ேபாலீசார் வழிப்பறி சம்பவத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

    • 2 பேர் கைது
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    மிசோரம் மாநிலம் அய்சால் பகுதியை சேர்ந்தவர் ஜிம்மி லால்சஞ்சுவா (வயது 26). இவரு டைய உறவினர் டேவிட் என்பவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உதவிக்காக உடனிருக்கும் ஜிம்மி லால்சஞ்சுவா சத்துவாச்சா ரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன் தினம் ஜிம்மி லால்சஞ்சுவா சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை யில் உள்ள மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி விட்டு தங்கும் விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சட்டப்பையில் வைத்திருந்த ரூ.1,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

    இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்ப திந்து விசாரித்தார். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), அருண் (25), அர விந்த் (23) ஆகிய 3 பேர் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரஞ்சித், அரவிந்த் ஆகியோரை கைது செய்து ரூ.1,000 மற்றும் செல்போனை மீட்டனர். மேலும் அருணை தேடி வருகின்றனர்.

    • செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • விசாரணை நடத்தியதில், சின்ன பேரா ளியை சேர்ந்த சுந்தர மூர்த்தி(28), வினோத்(23) என்பது தெரியவந்தது.

    விருதுநகர்

    விருதுநகர் கருப்பசாமி நகரை சேர்ந்தவர் லோகேஷ் (வயது18). இவர் செவல்பட் டியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். கல்லூரி முடிந்து விருதுநகரில் உள்ள உணவகத்தில் லோகேஷ் பகுதி நேர வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு 1 மணிய ளவில் வேலையை முடித்து விட்டு லோகேஷ் வீட்டுக்கு நடந்து சென்று கொண்டி ருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் கத்தியை காட்டி மிரட்டி லோகேஷிடம் இருந்த ரூ.500 மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு தப்பினர்.

    விருதுநகர் தாழையப்பன் தெருவை சேர்ந்தவர் சக்திவேல்(வயது22). இவர் நேற்று லட்சுமி நகருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவரை வழிமறித்த 2 பேர் மிரட்டி செல்போன், பணத்தை பறித்துச் சென்ற னர்.

    இந்த 2 சம்பவங்கள் தொடர்பாக பாண்டியன் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், சின்ன பேரா ளியை சேர்ந்த சுந்தர மூர்த்தி(28), வினோத்(23) ஆகிய 2 பேர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    • தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் பீதி
    • சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் சிக்கல்

    வேலூர்:

    வேலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. பஸ்ஸில் கூட்டமாக பயணிகள் ஏறும்போது தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் சமூக விரோத கும்பல் நைசாக பயணிகளிடம் இருந்து செல்போன், மணி பர்ஸ் உள்ளிட்டவைகளை திருடி செல்கின்றனர்.

    அவசரத்தில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் இது குறித்து போலீசில் புகார் செய்வது இல்லை.

    இந்த நிலையில் இன்று காலை பஸ் நிலையத்திற்கு வந்த ஒருவரின் செல்போனை மர்ம கும்பல் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடி சென்று விட்டனர்.

    புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் அமர்வதற்காக போடப்பட்ட இருக்கைகளில் சமூக விரோதிகள் அமர்ந்து கொள்வது படுத்துக் கொள்வது என ஆக்கிரமிப்பு செய்வதால் பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் நின்று கொண்டு இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    புதிய பஸ் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படாததால் குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    எனவே பயணிகளில் உடைமைகளை பாதுகாக்க போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். ஏற்கனவே இருந்த புதிய பஸ் நிலையத்தில் போலீஸ் அவுட் போஸ்ட் அமைத்து நிரந்தரமாக போலீசார் பணியாற்றி வந்தனர்.

    ஆனால் தற்போது புதிய பஸ் நிலையத்திற்குள் போலீசார் யாரும் வந்து வராததால் சமூக விரோத கும்பல் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு குற்ற செயல்களை தடுக்க வேண்டும் சமூக விரோத கும்பலை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மொரட்டாண்டி குப்பம் டோல்கேட் அருகில் லாரி வந்தபோது சாலை ஓரமாக 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.
    • பிடிபட்ட வாலிபரை வானூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் காசிநாதன் (வயது 48) லாரி டிரைவர். சம்பவத்தன்று இரவு 7 மணி அளவில் லாரியில் புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்றுள்ளார். அப்போது மொரட்டாண்டி குப்பம் டோல்கேட் அருகில் லாரி வந்தபோது சாலை ஓரமாக 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் காசிநாதன் ஒட்டி வந்த லாரியை நிறுத்தி லிப்ட் கேட்பது போல் ஏறினர். சிறிது தூரம் லாரி சென்றவுடன் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி காசிநாதனிடம் இருந்து ரூ. 700 மற்றும் விலை உயர்ந்த செல்போனை திருடி சென்றனர். அப்போது காசிநாதன் வேலை பார்த்து வரும் கம்பெனியை சேர்ந்த லாரி ஒன்று வந்தது. அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர் கம்பெனி லாரி நின்று கொண்டிருப்பதை பார்த்து உடனே லாரியை நிறுத்தி அங்கு சென்று பார்த்தார். அப்போது கத்தியை காட்டி காசிநாதனிடம் பணம் செல்போனை திருடி சென்ற நபர்களில் ஒருவனை அவர்கள் மடக்கி பிடித்தனர்.

    இதனை தொடர்ந்து பிடிபட்ட வாலிபரை வானூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரிடம் விசாரணை செய்ததில் புதுவை மாநிலம் திருக்கனூர் பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 38) என்பதும் தப்பி ஓடிய வாலிபர் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த ராஜகுமரன் (40) என தெரியவந்தது. இவர்கள் 2 பேரும் நண்பர்கள் என்பதும் ஒன்றாக சேர்ந்து இரவு நேரங்களில் வரும் லாரியில் லிப்ட் கேட்பது போல் ஏறி அவர்களிடமிருந்து பணம் பொருட்களை கொள்ளையடிப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இது குறித்து இவர்கள் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீசார் தமிழரசனை கைது செய்தனர். தப்பியோடிய ராஜகுமரனை வலைவீசி தேடி வருகின்றனர். லிப்ட் கேட்டு லாரி வாகனங்களில் ஏறி பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பது வாகன ஓட்டிகளிடையே வேதனை அளிக்கிறது.

    • ஆட்டோவில் வந்து துணிகரம்
    • 3 பேர் கைது

    வேலூர்:

    வேலூரை அடுத்த இடையன் சாத்து பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 25). இவர் நேற்று சித்தேரியில் இருந்து இடையஞ்சாத்து செல்லும் சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் திடீ க ரென சத்தியமூர்த்தியை வழிமறித்து கத்தியை காட்டிமிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் சத்தியமூர்த்தியிடம் செல்போன் பறித்தது சேண் பாக்கத்தை சேர்ந்த தங்கராஜ் (24), தொரப்பாடியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), சின்ன சித்தேரியை சேர்ந்த கோபிநாத் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீ சார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் செல்போனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×