வாலிபரை தாக்கி செல்போனை பறித்த மர்ம நபர்கள்

திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் வாலிபரை தாக்கி செல்போனை பறித்த மர்ம நபர்கள்இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார்
வாலிபரை தாக்கி செல்போனை பறித்த மர்ம நபர்கள்
Published on

திருச்சி

திருச்சி கம்பரசம்பேட்டை பெரியார் நகர் கீழத்தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் பாலமுருகன் (வயது 18). இவர் திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் ஒரு நகைக்கடை அருகில் உள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் இவரை எதிர்பாராத விதமாக தாக்கி, செல்போனை பறித்து விட்டு தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய மர்ம நபர்கள் ஓடத்துறை மேம்பாலம் பகுதியில் சென்று விட்டனர். உடனே பாலமுருகன் இதுகுறித்து கோட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார் .புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com