வடமாநில வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு

2 பேர் கைதுபோலீசார் விசாரணை
வடமாநில வாலிபரிடம் பணம், செல்போன் பறிப்பு
Published on

வேலூர்:

மிசோரம் மாநிலம் அய்சால் பகுதியை சேர்ந்தவர் ஜிம்மி லால்சஞ்சுவா (வயது 26). இவரு டைய உறவினர் டேவிட் என்பவர் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உதவிக்காக உடனிருக்கும் ஜிம்மி லால்சஞ்சுவா சத்துவாச்சா ரியில் உள்ள தங்கும் விடுதியில் தங்கி உள்ளார். நேற்று முன் தினம் ஜிம்மி லால்சஞ்சுவா சத்துவாச்சாரி ஆர்.டி.ஓ. சாலை யில் உள்ள மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கி விட்டு தங்கும் விடுதி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி சட்டப்பையில் வைத்திருந்த ரூ.1,000 மற்றும் செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

இதுகுறித்து அவர் சத்துவாச்சாரி போலீசில் புகார் அளித் தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்ப திந்து விசாரித்தார். அதில், வழிப்பறியில் ஈடுபட்டது வேலூர் ஓல்டுடவுனை சேர்ந்த ரஞ்சித் (வயது 28), அருண் (25), அர விந்த் (23) ஆகிய 3 பேர் என்று தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ரஞ்சித், அரவிந்த் ஆகியோரை கைது செய்து ரூ.1,000 மற்றும் செல்போனை மீட்டனர். மேலும் அருணை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com