என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலிபரிடம் செல்போன் பறிப்பு
    X

    வாலிபரிடம் செல்போன் பறிப்பு

    • ஆட்டோவில் வந்து துணிகரம்
    • 3 பேர் கைது

    வேலூர்:

    வேலூரை அடுத்த இடையன் சாத்து பகுதியை சேர்ந்தவர் சத்யமூர்த்தி (வயது 25). இவர் நேற்று சித்தேரியில் இருந்து இடையஞ்சாத்து செல்லும் சாலையில் நின்று செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக ஆட்டோவில் வந்த 3 பேர் திடீ க ரென சத்தியமூர்த்தியை வழிமறித்து கத்தியை காட்டிமிரட்டி அவரிடம் இருந்து செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து அவர் அரியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அதில் சத்தியமூர்த்தியிடம் செல்போன் பறித்தது சேண் பாக்கத்தை சேர்ந்த தங்கராஜ் (24), தொரப்பாடியை சேர்ந்த ஸ்ரீகாந்த் (21), சின்ன சித்தேரியை சேர்ந்த கோபிநாத் (21) ஆகியோர் என்பது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து போலீ சார் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் செல்போனை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×