search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "brewling liquor"

    • ஒரு தோட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த 3 பேர் சாராயம் காய்ச்சுவதை போலீசார் கண்டுபிடித்தனர்.
    • சாராயம் காய்ச்சும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே உள்ளார் மேற்கே கருவாட்டுப்பாறை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு புகார் சென்றது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் மற்றும் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அப்பகுதியில் ஒரு தோட்டத்தில் ராமநாதபுரத்தை சேர்ந்த கனகசபாபதி (வயது 47), மாரிமுத்து ( 40), காளிராஜ் ( 22) ஆகிய 3 பேர் சாராயம் காய்ச்சுவதை கண்டுபிடித்தனர். உடனடியாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அங்கிருந்து சாராயம் காய்ச்சும் பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×