என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bjp guts
நீங்கள் தேடியது "BJP guts"
பா.ஜனதா தலைவர்களில் ‘நிதின் கட்காரி மட்டுமே துணிச்சல் கொண்டவர்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். #RahulGandhi #NitinGadkari #BJP
புதுடெல்லி:
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கடந்த 2-ந் தேதி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பா.ஜனதா தொண்டர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனவும், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யாத ஒருவரால் நாட்டை கவனிக்க முடியாது என்றும் கூறினார்.
முன்னதாக ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்களை மக்கள் அடிப்பார்கள்’ என்று கட்காரி கூறியிருந்தார். இவை அனைத்தும் பிரதமர் மோடியை மனதில் வைத்தே கட்காரி கூறியதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். மேலும் பிரதமர் பதவிக்கு கட்காரி குறி வைப்பதாகவும் பேச்சு நிலவுகிறது.
இந்த நிலையில் கட்காரியின் பேச்சுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாராட்டு தெரிவித்து இருக்கிறார். இது குறித்து தனது டுவிட்டர் தளத்தில் அவர் கூறுகையில், ‘கட்காரிஜி வாழ்த்துகள். பா.ஜனதாவில் நீங்கள் மட்டும்தான் சிறிது துணிச்சல் உள்ளவர். இதைப்போல ரபேல் மற்றும் அனில் அம்பானி, விவசாயிகள் துயர் மற்றும் ஜனநாயக அமைப்புகள் சீரழிப்பு போன்றவை குறித்தும் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இது பா.ஜனதாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.#RahulGandhi #NitinGadkari #BJP
பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி கடந்த 2-ந் தேதி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், பா.ஜனதா தொண்டர்கள் முதலில் தங்கள் குடும்பத்தை கவனிக்க வேண்டும் எனவும், குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்யாத ஒருவரால் நாட்டை கவனிக்க முடியாது என்றும் கூறினார்.
முன்னதாக ‘தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தலைவர்களை மக்கள் அடிப்பார்கள்’ என்று கட்காரி கூறியிருந்தார். இவை அனைத்தும் பிரதமர் மோடியை மனதில் வைத்தே கட்காரி கூறியதாக காங்கிரசார் கூறி வருகின்றனர். மேலும் பிரதமர் பதவிக்கு கட்காரி குறி வைப்பதாகவும் பேச்சு நிலவுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X