search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "bihar person died"

    தண்டவாளத்தில் நடந்து சென்ற பீகார் வாலிபர் மீது ரெயில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    விருத்தாசலம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பப்லு (வயது 30). இவர் திருச்சி அருகே உள்ள லால்குடியில் ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். இதற்காக லால்குடி அருகே உள்ள பகுதியில் தங்கியிருந்தார்.

    இன்று காலை லால்குடி அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டார். பின்னர் வேலை முடிந்து தண்டவாளத்தில் நடந்து சென்றார். அந்த நேரத்தில் விருத்தாசலத்தில் இருந்து திருச்சி நோக்கி வந்த பயணிகள் ரெயில் திடீரென பப்லு மீது மோதியது.

    இதில் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே பப்லு பரிதாபமாக இறந்தார். இது குறித்து விருத்தாசலம் ரெயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×