search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "avalanche"

    காஷ்மீர் பனிச்சரிவிற்குள் சிக்கியவர்களில் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். #Kashmir #Avalanche
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காஷ்மீரின் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக வானிலை இலாகா கூறியிருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இதற்கிடையே, இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.



    இந்த பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவில் சிக்கியுள்ளதாக தெரிய வந்தது.

    பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

    பனிச்சரிவுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினரும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி புதைந்தவர்களில் இருந்து 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். #Kashmir #Avalanche
    காஷ்மீர் பனிச்சரிவுக்குள் 10 பேர் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. பனிச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். #Kashmir #Avalanche
    ஜம்மு:

    காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.

    நேற்று காஷ்மீரில் வட மாவட்டங்களில் பனிப்பொழிவு சீற்றம் அதிகமாக இருந்தது. இதையடுத்து பனிச்சரிவு ஏற்படலாம் என்று வானிலை இலாகா எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    காஷ்மீரில் உள்ள அனந்தநாக், பாட்கம், பாரமுல்லா, பந்தீப்போரா, கண்டர்பால், கார்கில், குல்கான், குப்வாரா மற்றும் லே ஆகிய 9 மாவட்டங்களிலும் பனிச்சரிவு ஏற்படும் ஆபத்து இருப்பதாக நேற்று வானிலை இலாகா கூறி இருந்தது. அதுபோல கடும் குளிரும் நிலவும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று காலை லே மாவட்டத்தின் பல பகுதிகளில் திடீர் பனிச்சரிவு ஏற்பட்டது. அங்குள்ள லடாக் பகுதியில் கர்துங்லா நெடுஞ்சாலையில் பனிக்கட்டிகள் விழுந்தன.

    பனிச்சரிவுகளில் ஒரு சொகுசு வாகனம் சிக்கிக்கொண்டது. அதில் இருந்த 10 பேர் பனிச்சரிவுக்குள் சிக்கி இருப்பதாக தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் பனிச்சரிவுகள் இருப்பதால் அந்த பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.

    பனிச்சரிவு ஏற்பட்டுள்ள கர்துங்லா பகுதி காஷ்மீர் மலைப்பகுதிகளில் இருக்கும் மிக உயரமான சாலைகளில் ஒன்றாகும். இந்த சாலை சையோக்-நுப்ரா பள்ளத்தாக்குகளை இணைக்கும் பாதை ஆகும். அங்கு செல்ல கடும் சவால் நிலவுகிறது.

    பனிச்சரிவுகளில் சிக்கி இருப்பவர்களை மீட்பதற்கு உள்ளூர் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உதவ ராணுவத்தினரும் விரைந்து உள்ளனர். மீட்பு பணிகள் கடும் போராட்டத்துக்கு மத்தியில் நடந்து வருகிறது.



    இதற்கிடையே மேலும் பல பகுதிகளில் பனிச்சரிவு ஏற்படலாம் என்று லே மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு வீடுகளுக்குள் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    லே மாவட்டத்தில் இன்று மைனஸ் 15.6 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலை நிலவியது. கார்கில் பகுதியில் மைனஸ் 19.2 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பநிலை காணப்பட்டது.

    அடுத்த 2 நாட்களுக்கு பனிப்பொழிவின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை இலாகா கூறி உள்ளது.  #Kashmir #Avalanche
    ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி ராணுவ வீரர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir #Avalanche #Armyjawandies
    ஸ்ரீநகர்:

    வட மாநிலங்களில் பனிக்காலம் தொடங்கியதில் இருந்து கடும் குளிர் வாட்டி வதைக்கிறது. காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில் இருந்து கடும் குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.
     
    ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. 



    இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக இன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. அந்த பகுதியில் பணியில் இருந்த 2 ராணுவ வீரர்கள் இதில் சிக்கிக் கொண்டனர்.

    தகவலறிந்த மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்றனர். அதில், ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு வீரர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் என அதிகாரிகள் 
    தெரிவித்தனர். #JammuKashmir #Avalanche #Armyjawandies
    பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கிய பிரிட்டிஷ் மலையேற்ற வீரர்கள் இருவர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். #PakistanAvalanche #BritishClimbers
    இஸ்லாமாபாத்:

    பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் புரூஸ் நார்மண்ட் மற்றும் டிமோதி மில்லர். இருவரும் மலையேற்ற வீரர்கள். ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ்டியன் உபேர் என்ற வீரருடன் நேற்று மலையேற்ற பயிற்சிக்காக பாகிஸ்தான் வந்தனர்.

    இவர்கள் சுமார் 19,000 அடி தொலைவுள்ள ஹன்சா சமவெளியில் உள்ள அல்டார் சர் மலையில் பயிற்சிகளை மேற்கொண்டனர்.

    அப்போது ஏற்பட்ட பனிச்சரிவில் 3 பேரும் சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் தங்களை காப்பாற்றுமாறு தகவல் கொடுத்தனர்.



    தகவலறிந்து பாகிஸ்தான் ராணுவத்தின் ஹெலிகாப்டர் அங்கு விரைந்து வந்தது. அவர்கள் உதவியுடன் பனிச்சரிவில் சிக்கியிருந்த பிரிட்டிஷ் வீர்ர்கள் இருவரும் சிறிய காயங்களுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
     
    மேலும், பனிச்சரிவில் சிக்கிய ஆஸ்திரேலிய மலையேற்ற வீரர் கிறிஸ்டியன் உபேர் உயிரிழந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். #PakistanAvalanche #BritishClimbers
    ×