என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Auto Driver murder"
பூந்தமல்லி:
குன்றத்தூரை அடுத்த நந்தம்பாக்கம், பாரதி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி தேவி. கட்டிட தொழிலாளி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
ராஜேந்திரனுக்கு குடிப்பழக்கம் உண்டு. நேற்று காலை மது போதையில் இருந்த அவர் ஆட்டோ ஓட்டச் செல்லாமல் வீட்டிலேயே தூங்கினார்.
இதையடுத்து தேவி உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இரவு திரும்பி வந்தபோது வீட்டில் உள்ள அறையில் கணவர் ராஜேந்திரன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது தலையில் கல் போடப்பட்டு இருந்தது.
இதுகுறித்து குன்றத்தூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
கொலை நடந்த போது ராஜேந்திரனின் மகள் அருகில் உள்ள பாட்டி வீட்டுக்கும், மகன் பக்கத்து வீட்டில் உள்ள சிறுவர்களிடம் விளையாடவும் சென்றுவிட்டனர். இதனால் கொலையாளிகள் வீட்டுக்கு வந்து சென்றது எப்போது என்று தெரியவில்லை.
கொலையுண்ட ராஜேந்திரனின் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் தேவியை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இதே போல் தேவியும் முதல் கணவரை பிரிந்து ராஜேந்திரனை இரண்டாவதாக திருமணம் செய்து இருந்தார்.
கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று உடனடியாக தெரியவில்ல. பெண் தகராறில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
இதுதொடர்பாக தேவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரை பிடிக்க விரைந்துள்ளனர்.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 37), ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மரியபுஷ்பம் என்ற மனைவியும், ஹரிஷ் (5), ஆதித்யா (7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் செந்தில்குமார் வீட்டில் கட்டில் அருகே தரையில் விழுந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மரியபுஷ்பம் எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் நேற்று முன்தினம் ராமச்சந்திரா நகரில் டாஸ்மாக் கடை அருகே தனது கணவர் செந்தில்குமாருக்கும், சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் இதில் தாக்கப்பட்டதால் அவர் இறந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து போலீசார் செந்தில்குமாரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நேற்று அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது செந்தில்குமார் தாக்கப்பட்டதில் காயம் அடைந்து இறந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்ற உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக செந்தில்குமாருடன் தகராறில் ஈடுபட்ட அவரது நண்பர்கள் உள்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அதிக போதையில் அவர் இறந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் பலர் சேர்ந்து தாக்கியதில் செந்தில்குமார் இறந்ததாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்