search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arani teacher arrest"

    ஆரணியில் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவை கொண்டிருந்த ஆசிரியை குறித்து போலீஸ் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
    ஆரணி:

    ஆரணி அடுத்த பையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் உமேஷ்குமார் (வயது 45), ஆசிரியர். இவரது மனைவி நித்யா (30). வேலூர் மாவட்டம் மாமண்டூர் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். நித்யா, பையூர் பகுதியை சேர்ந்த ஐ.டி.ஐ. படிக்கும் 17 வயது மாணவன் மற்றும் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து உமேஷ்குமார் ஆரணி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அவர் கலெக்டர் கந்தசாமியிடம் புகார் அளித்தார்.

    இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் சம்பவம் உண்மை என்பது தெரியவரவே ஆரணி மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மைதிலி போக்சோ சட்டத்தின் கீழ் நித்யாவை கைது செய்து வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைத்தனர். மேலும் அவர் பணியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார்.

    அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது. அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். 2 மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்.

    அந்த பள்ளியில் 5 மாணவர்களை அவரது வலையில் வீழ்த்தியுள்ளார். அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை செல்போனில் படம் பிடித்துள்ளார்.

    சில படங்கள் பார்க்கவே அருவருப்பாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர்.

    பையூர் பள்ளியில் மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது தெரியவந்ததால் மாமண்டூர் பள்ளிக்கு மாற்றப்பட்டார்.

    முன்னதாக செங்கத்தில் வேலை பார்த்த போது அங்கு ஒரு மாணவனுடன் தொடர்பு ஏற்பட்டது.

    ஆனால் மாணவர்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை செல்போனில் இருந்து அகற்றாமல் இருந்துள்ளார். இதனை அவரது கணவர் பார்த்து விட்டார். அந்த படம் வீடியோக்களை ஆதாரமாக எடுத்து கொண்டுதான் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார்.

    3 அரசு பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியை நித்யாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் எத்தனைபேர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வகுப்பறையில் தனக்கு பிடித்த பிளஸ்-1 படிக்கும் மாணவர் ஒருவருடன் தற்போது வரை தொடர்பில் இருந்துள்ளார். அந்த மாணவனை பள்ளியில் வைத்து தனியாக அழைத்து அடிக்கடி பேசியுள்ளார்.

    மேலும் செல்போன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். நித்யாவின் ஆசை வார்த்தையில் அந்த மாணவர் வீழ்ந்துள்ளார். அவரை வீட்டுக்கு அழைத்து சென்று தனிமையில் இருந்துள்ளார்.

    மேலும் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று சுற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது. ஆசிரியை நித்யாவின் லீலைகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பள்ளி மாணவர்களுடன் தகாத உறவை கொண்டிருந்த ஆசிரியை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த பையூர் கிராமத்தை சேர்ந்தவர் உமேஷ்குமார். கல்பூண்டி அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி நித்யா (30). இவர்களுக்கு ஒரு பெண், ஒரு ஆண் குழந்தை உள்ளனர். நித்யா ஆரணி அடுத்த மாமண்டூர் அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

    நித்யா கடந்த 2016-ம் ஆண்டு ஆரணி அடுத்த பையூரில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரிந்து வந்தார். அதே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில பாடம் டியூசன் எடுத்து வந்தார். அப்போது பள்ளி மாணவன் ஒருவருடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டது, அந்த மாணவனுடன் நித்யா தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் ஆசிரியை நித்யா செங்கம் பகுதியில் உள்ள பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அங்கும் ஒரு மாணவனுடன் நித்யாவுக்கு தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    மாணவர்களுடன் தனிமையில் இருந்த ஆபாச புகைப்படங்களை எடுத்து ரசித்து வந்துள்ளார். 2 மாணவர்களையும் வெளியூர் அழைத்து சென்று ஓட்டலில் அறை எடுத்தும் தங்கி உள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஆண்டு உமேஷ்குமாருக்கு தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. பள்ளி விடுமுறை நாட்களில் ஒருநாள் நித்யா வீட்டில் செல்போனை வைத்து விட்டு வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது உமேஷ்குமார் மனைவியின் செல்போனை எடுத்து பார்த்தபோது, அவர் 2 மாணவர்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தனிமையில் இருந்து வந்த வீடியோ மற்றும் படங்கள் இருந்தது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த உமேஷ்குமார் தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

    இந்நிலையில் மாணவர்களுடன் தனது மனைவி தனிமையில் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை சேகரித்த உமேஷ்குமார் திருவண்ணாமலை கலெக்டர் கந்தசாமியிடம் புகார் கொடுத்தார்.

    கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு நன்னடத்தை அலுவலர் சித்ரா பிரியா அந்த மனுவை ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டர் மைதிலி, சப்-இன்ஸ்பெக்டர் உஷா ஆகியோர் ஆசிரியை நித்யாவை அழைத்து விசாரணை செய்தனர்.

    மேலும் பள்ளி மாணவர்களிடம் குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது ஆசிரியை நித்யா மாணவர்களுடன் தகாத உறவில் இருந்தது உறுதியானது.

    இதையடுத்து நித்யா மீது வழக்குபதிவு செய்து போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

    மாணவர்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கைதான ஆசிரியை நித்யா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை சஸ்பெண்டு செய்து முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    ×