search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andipatti worker murder"

    ஆண்டிப்பட்டி அருகே கூலித்தொழிலாளியை அடித்து கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வருசநாடு முருக்கோடையை சேர்ந்த முருகன் மகன் சிவா (வயது27). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு குடும்பத்துடன் தேனிக்கு குடிவந்தார்.

    கூலித்தொழிலாளியான சிவா சம்பவத்தன்று உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக முருக்கோடை சென்றுள்ளார். அங்கு அதே பகுதியை சேர்ந்த சவுந்தர் என்பவர் சிவாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார். தகராறு முற்றிய நிலையில் கம்பை எடுத்து சிவாவை பலமாக தாக்கினார்.

    அக்கம் பக்கத்தினர் ஒன்று கூடி அவர்களை விலக்கி விட்டனர். இருந்தபோதும் சிவாவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் திடீரென சிவா உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரை கைது செய்தனர்.

    ×