search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Andipatti suicide"

    ஆண்டிப்பட்டி அருகே ஆசிரியர் கண்டித்ததால் பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே உள்ள ராஜதானி ஆசாரிப்பட்டி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 35). இவரதுமகள் காவ்யஸ்ரீ (வயது 12). அதே பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டு பாடம் எழுதாமல் மாணவி பள்ளிக்கு வந்தார்.

    இதனால் வகுப்பு ஆசிரியர் மாணவியை கண்டித்து திட்டினார். மற்ற மாணவிகள் முன்னிலையில் திட்டியதால் காவ்யஸ்ரீ மனமுடைந்தார்.

    மாலையில் வீட்டுக்கு வந்த உடன் தனது அறைக்கு சென்று நைலான் கயிறால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அறை கதவு நீண்ட நேரம் திறக்காமல் இருந்ததை கண்டு அவரது தாய் உள்ளே சென்று பார்த்த போது மகள் இறந்து கிடந்தார்.

    இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி அருகே நோய் கொடுமையால் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூரை சேர்ந்தவர் லோகநாதன் (வயது43). நோய் கொடுமையால் அவதிப்பட்டு வந்த இவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே துரைச்சாமிபுரம் அரச மரத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி காலாமணி (38). நோய்கொடுமையால் அவதிப்பட்டு வந்த காலாமணி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரண்மனைபுதூர் கோம்பை பகுதியை சேர்ந்தவர் சாமிநான் (32). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. பள்ளத்தூர் தோட்டத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமிநாதன் மாயமானார். அவரை தேடி வந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தோட்டத்தில் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×