search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol drunk"

    வில்லியனூர் அருகே மதுகுடிக்கும் போது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது28). இவரும் அகரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனி (45), வினோத்குமார்(25) மற்றும் ராகுல் (19) ஆகியோரும் நண்பர்கள். இவர்கள் 4 பேரும் நேற்று மாலை தொண்டமாநத்தம் எஸ்.எஸ். நகரில் மதுகுடித்தனர். அப்போது திடீரென கிருஷ்ணனுக்கும் மற்ற 3 பேருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த பழனி உள்பட 3 பேரும் சேர்ந்து கிருஷ்ணனை சரமாரியாக தாக்கினர். மேலும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதில் கையில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணன் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றார்.

    பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து பழனி உள்பட 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ×