search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alagar Koyil"

    அழகர் கோவில் அருகே பால் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம், அழகர் கோவில் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு கிடாரிப்பட்டிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    வல்லாளப்பட்டி தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே பால் ஏற்றிக் கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரமோகன் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரமோகன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×