என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » alagar koyil
நீங்கள் தேடியது "Alagar Koyil"
அழகர் கோவில் அருகே பால் லாரி மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூர்:
மதுரை மாவட்டம், அழகர் கோவில் அருகே உள்ள அழகாபுரியைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 45). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு கிடாரிப்பட்டிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.
வல்லாளப்பட்டி தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே பால் ஏற்றிக் கொண்டு வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சந்திரமோகன் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரமோகன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேலவளவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X