search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "after falling"

    • மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.
    • இந்த சம்பவம் குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு லட்சுமி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (59). இவரது மனைவி லதா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜா திருப்பூரில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் டெக்னிக் பிரிவில் வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் ராஜா சம்பவத்தன்று பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்காக தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனைக்கு சென்றார். வண்டியை ராஜா ஓட்ட பின்னால் லதா அமர்ந்து வந்தார்.

    சித்தோடு சமத்துவபுரம் மேடு அருகே கோவை- சேலம் பைபாஸ் ரோடு அருகே வந்த போது லதாவுக்கு திடீரென மயக்கம் வந்துள்ளது. அதையடுத்து ராஜா மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய போது எதிர்பாராத விதமாக லதா ரோட்டில் தவறி விழுந்துள்ளார்.

    இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மனைவியை சிகிச்சைக்காக நசியனூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ராஜா கொண்டு சேர்த்தார்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலயின்றி லதா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
    • அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்து தகவல் தெரிவித்தனர்.

    அந்தியூர்:

    அந்தியூர் கொல்லம்பாளையம் செல்லும் சாலையில் ஏ.எஸ்.எம். காலனி பகுதி அருகே உள்ள சாக்கடை கால்வாயில் 57 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி இறந்து கிடப்பதாக அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு அந்த பகுதி பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூதாட்டியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அந்தியூர் அரசு மருத்து வமனைக்கு கொண்டு சென்று அங்கே வைத்து இறந்த மூதாட்டி எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    விசாரணையில் சத்தியமங்கலம் கோனமுலை அருகே உள்ள சென்னிமூப்பன்புதூர் பகுதியை சேர்ந்த பழனிச்சாமியின் மனைவி ரங்கம்மாள் (57) என்பது தெரிய வந்தது. ரங்கம்மாள் கடந்த 4 ஆண்டுகளாக மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது உறவினர் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது. அந்தியூர் பகுதியில் இறந்து கிடப்பதை அறிந்து உறவினர்கள் இன்று காலை அந்தியூர் போலீஸ் நிலையத்திற்கு வந்த தகவல் தெரிவித்தனர்.

    ×